சனி, 27 ஏப்ரல், 2024

‘இந்தி’த் திணிப்பிலும் சாதனை நிகழ்த்துவாரா மோடிஜி?!?!

தமிழனாகப் பிறக்கவில்லையே என்று வருந்தி வருந்தி நொந்து நூலாகிப்போன மோடி அவர்களே,

எப்படியெல்லாமோ மட்டுமல்ல, இப்படியும்[கீழ்க்காணும் படம்] தமிழன் மீது திணிக்கப்படுகிறது இந்தி என்பது நீர் அறியாத ரகசியமா என்ன?

நாளெல்லாம் ராம நாமத்தை ஜெபிப்பதையும், முஸ்லிம்களைச் சபிப்பதையுமே உயிர் மூச்சாகக் கொண்டுள்ள மோடிஜி அவர்களே,

அதென்னய்யா ‘நிதி ஆப்கே நிகத்’[கீழே உள்ள அறிக்கை நகலை வாசிப்பீர்]?

உம்மிடம் உள்ள செயற்கை நுண்னறிவு மொழியாக்கக் கருவியால் இதைத் தமிழாக்கம் செய்ய இயலவில்லையா?

மூத்த மொழியாகிய தமிழின் பெருமையை உலகறியச் செய்வதாகச் சொல்லிக்கொள்ளும் உமக்கு, தமிழனுக்குப் புரியாத தலைப்பைக் கொடுத்து, விளம்பரம் செய்து நிகழ்ச்சி நடத்தப்படுவது தெரியாதா?

தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருந்தீர்/இருக்கிறீர் என்றால், இதற்குத்தான் துரோகம் என்று பெயர்; நயவஞ்சகம்[நயமாகப் பேசிக் கெடுப்பது] என்றும் சொல்லலாம்.

ஓட்டுக் கேட்க வரும்போதெல்லாம் வாய்கிழியத் தமிழைப் புகழாமல், இப்படியான துரோகத்தை நீர் செய்திருந்தால், இது இந்தி வெறியர்கள் வழக்கமாகச் செய்யும் அடாவடித்தனம்தான் என்றெண்ணி வருத்தப்படுவதோடு நிறுத்திக்கொண்டிருப்போம்; இந்தவொரு பதிவின் மூலம் ‘துரோகி’ என்று உம்மைச் சாடுவதற்கான அவசியம் நேர்ந்திருக்காது.

மீண்டும் நீர் ஆட்சியைத் தக்க வைப்பீரா அல்லவா என்பது ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகுதான் தெரியும்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இன்னும் 35 நாட்கள் போல் கால அவகாசம் உள்ளது. அதுவரை இது போன்ற செயல்களின் மூலம் இந்தியைத் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தி பேசாத அத்தனை மாநிலங்களிலும் திணி திணி என்று திணிக்கலாம்.

தேர்தல் முடிவு 100% உமக்குச் சாதகமாகவே அமையும். இந்தியாவில் பெரும்பான்மையினராக ‘இந்தி’யர்[மூடநம்பிக்கையாளரும்தான்] உள்ளவரை உம்மை எவரும் அசைக்க முடியாது. இனியும் நீரே பிரதமர். 

திணியும்! இந்தி வெறி தணியும்வரை[என்று தணியும்?] அதைத் திணியும்!! 



படம் உதவி[நன்றி]: https://thamizhanambi.blogspot.com/2024/04/blog-post.html