அடாவடித்தனத்தில் ஈடுபட்ட நம் எதிரியை இரும்புக் கரம் கொண்டு அடக்கிய நம் பிரதமர் மோடி[நெருப்பு]யின் அதிரடி நடவடிக்கை கண்டு ஒட்டுமொத்த உலகமும் வியப்பில் ஆழ்ந்துகிடக்கிறது.
சுட்டுவிரல் அசைவில் பகைவன் பாகிஸ்தானியனின் கொட்டத்தை அடக்கிய பிரதமரின் சாதனை நம் குடிமக்களையும் பெரு மகிழ்ச்சியில் திளைக்கச் செய்துள்ளது.
ஆனால்.....
மாநிலங்களின்[குறிப்பாகத் தமிழ்நாடு] அதிகாரங்களை முற்றிலுமாய்ப் பறித்து அவற்றை முடக்கிவிடும் தீவிர நடவடிக்கையைப் பிரதமர் மேற்கொண்டிருப்பது மக்களைக் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.
அந்த நடவடிக்கை.....
மாநில அரசுகள் நிறைவேற்றும் மசோதாக்களைக் கிடப்பில் போட்டு, அவை தம் மக்களுக்கு நற்பணிகள் செய்யவிடாமல் தடுக்கும் ஆளுநர்களின் அடாவடித்தனங்களைத் தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதல்லவா, அந்தத் தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்திட, குடியரசுத் தலைவரைத் தூண்டி உச்ச நீதிமன்றத்திடம் விளக்கங்கள் கேட்டிருப்பதுதான்.
இந்நிலையில், நாடாளுமன்றக் கூட்டங்களைத் தவிர்ப்பதை[பெரும்பாலும்] வழக்கமாக்கிகொண்டிருந்த மோடி, பாகிஸ்தானுடனான மோதலின்போது அனைத்துக் கட்சிக் கூட்டங்களைப் புறக்கணித்ததும், மாநில உரிமைகளை முற்றிலுமாய்ப் பறிக்க முயல்வதும் அவர் இந்த நாட்டின் சர்வாதிகாரியாக ஆகிக்கொண்டிருக்கிறாரோ என்னும் ஐயத்தைத் தோற்றுவிக்கிறது.
மோடி நம் பிரதமராகவே நீடிக்க வேண்டும் என்பது மக்களின் ஆசை.
இப்படி ஆசைப்படுவது அசட்டுத்தனமானதா அறிவுப்பூர்வமானதா என்பதை இந்த மண்ணில் இனி அடுத்தடுத்து இடம்பெறும் நிகழ்வுகளால் அறியலாம்.