‘ஸ்ரீ-இந்தியா’ போர் குறித்த சூடான செய்திகள் அடுத்தடுத்து ஊடகங்களில் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் வைஷாலி நகர்ப் பகுதியில் உள்ள இனிப்புக் கடையின் உரிமையாளர் அஞ்சலி ஜெயின், தான் தயாரிக்கும் ‘மைசூர் பாக்’இன் பெயரை, ‘மைசூர் ஸ்ரீ’ என்று மாற்றியிருப்பது[ஊடகங்கள் பலவற்றிலும் வெளியான செய்தி> அரசியல் தலைவர்களோ வேறு எவருமோ இதைக் கண்டித்ததாக அறியப்படவில்லை] நம் பிரதமர் மோடி மட்டுமல்லாமல் இந்தியக் குடிமக்களாகிய நம் அனைவரின் நெஞ்சங்களிலும் தேவாமிர்தத்தைப் பொழிந்துள்ளது.
அனைத்து வரலாற்று ஆவணங்களிலும் பாட நூல்களிலும்கூட ‘பாக்’ நீக்கப்பட்டு ‘ஸ்ரீ’ சேர்க்கப்படுதல் வேண்டும்.
சற்று முன்னர், தற்செயலாக விக்கிப்பீடியாவில் வாசித்த ‘ஸ்ரீ’ மாவட்டம்[ஆசாத் காஷ்மீர்] பற்றிய சிறு குறிப்பு பின்வருமாறு:
#ஸ்ரீ மாவட்டம்(Bagh District): இது ‘ஸ்ரீ’இன் ஆக்கிரமிப்பு ஆசாத் காஷ்மீர் பகுதியின் 10 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் ‘ஸ்ரீ’ நகரம் ஆகும். 770[சதுர கிலோ மீட்டர்] பரப்பளவு கொண்ட ‘ஸ்ரீ’ மாவட்டத்தின்[2017 ‘ஸ்ரீ’யின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி] மக்கள் தொகை 3,71,919 ஆகும்.
இம்மாவட்டதின் அலுவல் மொழி உருதுவாக இருப்பினும், மக்கள் பகாரி மொழி மற்றும் குஜ்ஜர் மொழிகளைப் பேசுகின்றனர். உருது மொழியில் ‘ஸ்ரீ’ என்பதற்குத் தோட்டம் என்று பொருள். இம்மாவட்டத்தில் ‘ஸ்ரீ’ கோட்டை உள்ளது# -விக்கிப்பீடியா[தமிழ்]
* * * * *
வாழ்க பாரத்[இந்தியா]! ஒழிக ஸ்ரீகிஸ்தான்!!