சனி, 31 மே, 2025

‘டாக்டர் ராமதாசா, அன்புமணியா?’... எவருடைய சேவை தமிழினத்திற்குத் தேவை?

டாக்டர் ராமதாஸ் ஆகிய தந்தைக்கும் அவரின் மகனான அன்புமணிக்கும் இடையேயான, 'பாமக' கட்சியின் தலைமைப் பதவிக்கான மோதல் நீடிக்கும் நிலையில், நம் முன்னே எழும் கேள்வி.....

“மோதலின் முடிவு எதுவாகவோ இருக்கட்டும், இந்த இருவரில் எவருடைய சேவை தமிழ் மக்களுக்குத் தேவை?”

டாக்டர் ராமதாசு(சாதிப் பற்று உள்ளவர் எனினும்> இல்லாதவர் எவர்?)அளப்பரிய தமிழ் மொழிப் பற்றும் தமிழினப் பற்றும் கொண்டவர்[அவருடையை தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் ஒரு பொருட்டல்ல> அவற்றால் பாதிப்புக்குள்ளாவது அவரின் சொந்தபந்தங்கள் மட்டுமே]; தமிழினம் எக்காலத்திலும் எக்காரணத்தைக்கொண்டும் தன் சுயமரியாதையை இழத்தல் கூடாது என்று எண்ணுபவர்.

அன்புமணி[டாக்டர்தான்] சுயநலவாதி; இந்தச் சுயநலம்தான், ஆளுநன் மூலம் அடாத செயல்களில் ஈடுபட்டு, தமிழர்களின் வளர்ச்சியைத் தடுத்து, தமிழினத்தை அடிமைப்படுத்த முயலும் ‘பாஜக’வுடன், பதவிக்காகக் கூட்டணி சேர்ந்து, அதற்குச் சேவகம் செய்ய அவரைத் தூண்டுகிறது.

இருவருக்கும் இடையேயான இந்த மலையளவு வேறுபாடு, நம் இனப் பாதுகாப்புக்குப் பாடுபடுபவர் மருத்துவர் ராமதாசுதான் என்பதை உறுதிப்படுத்துகிறது.

வெல்க தமிழின உணர்வாளர் மருத்துவர் ராமதாசு!