நம் மூளையில் ‘பாதாம் பருப்பு’ அளவுக்கு ஓர் உறுப்பு இருக்கிறது. இதை உணர்வுகளின்[கோபம், பயம், ஆத்திரம், அன்பு, கனிவு, துக்கம், சோகம் போன்றவை] மையம் என்கிறார்கள் ‘உடற்கூறு’ அறிஞர்கள்.
நினைவுகளைச் சேமிப்பதிலும், முடிவெடுப்பதிலும்கூட இது முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்தப் பாதாம் பருப்பு உறுப்பின் பெயர் ‘அமிக்டாலா’. தன் அளவை மாற்றுவது, வளர்வது, புதியன கற்பது போன்ற பல்திறன் வாய்க்கப்பெற்றது இது.
பிளாஸ்டிக்’ என்னும் விரிந்து சுருங்கும் பொருள் போன்றது இது என்றால் இதன் வடிவமைப்பை எளிதில் புரிந்துகொள்ளலாம்.
மாறும் எண்ணங்களுக்கேற்ப நம் மூளையின் அமைப்பு மாறுவதற்குக் காரணமும் இதுதான்.
இதன் பங்களிப்புடன் மூளையின வலிமையை, அதாவது சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கலாம் என்கிறார்கள் அறிவியல் ஆய்வாளர்கள்.
மன அழுத்தத்திற்கு நாம் உள்ளாகும்போது இதன் அளவு ஏறுமாறாக அதிகரித்து மூளையின் இயங்குதிறனைப் பாதிக்கிறது என்பது அறியத்தக்கது.
ஆகவே, ‘அமிக்டாலா’வை உரியமுறையில் பராமரிப்பது மிக மிக அவசியம்.
பராமரிப்புக்கு.....
யோகா பயிற்சி[மூச்சுப் பயிற்சி உட்பட] வெகுவாகப் பயன்படும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
எனவே, தொடர்ந்து யோகா செய்யுங்கள் என்பது அறிவுஜீவியாகிய[ஹி... ஹி... ஹி!!!] அடியேனின் பரிந்துரை.
* * * * *
*****கூடுதல் தகவல்களுக்கு, Amygdala என்று கூகுளில் தட்டச்சிட்டுத் தேடுக.