சனி, 3 மே, 2025

ஊடக அதர்மங்கள்!!!

ஊடகங்களின் உயிர்நாடிக் கொள்கை ‘நடுநிலை’ பிறழாமல் செய்தி வெளியிடுவது.

பகைவர்களோ நண்பர்களோ அவர்கள் குறித்த செய்திகளை வெளியிடுவதில் ‘தன்னலம்’[தற்சார்பு]தவிர்க்கப்படுதல் மிக முக்கியம்.

தவறினால்.....

வாசகர்கள் உண்மைச் செய்தியை அறிவது சாத்தியப்படாது.

தற்சார்பு, அல்லது தன்னலப் போக்குடன்[‘பாஜக’ ஆதரவு] தமிழில் செய்தி  வெளியிடும் ஊடகங்களில்[தினமலர் உட்பட] தினத்தந்தியும் ஒன்று.

//நாட்டின் இறையாண்மை & பாதுகாப்பிற்காக நாங்கள் எந்த எல்லைக்கும் செல்வோம்” என்று பாகிஸ்தான் ராணுவச் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி கூறியுள்ளார்// என்பது அண்மைச் செய்தி

இதிலுள்ள ‘கூறியுள்ளார்’ என்பதற்குப் பதிலாக, கொக்கரித்துள்ளார்’[எதிரி தவறு செய்தால் திருத்தலாம்.; தீங்கு செய்தால் தண்டிக்கலாம். வீணே வெறுப்பை வளர்ப்பது தேவையற்றது] என்னும் சொல் சேர்த்துச் செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி.

தன்னைத் திருத்திக்கொள்வது தந்திக்கு மட்டுமல்ல, ஊடகத் துறைக்கும் இந்த நாட்டுக்கும் நன்மை பயப்பதாக அமையும்.

                                       *   *   *   *   *

https://www.dailythanthi.com/news/world/you-choose-where-war-starts-well-decide-where-it-ends-dg-ispr-to-india-1155609