எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

திங்கள், 12 மே, 2025

இதுவும் ‘அவதாரி’ மோடியின் ஆட்சிக்காலச் சாதனைதான்!!!

டவுள் அவதாரமான மோடி தன் ஆட்சிகாலத்தில் நிகழ்த்தியுள்ள சாதனைகள் அநேகம்[பட்டியலிட இடுகை ஒன்று போதாது].

அவற்றில் ஊடகங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதும் ஒன்று//உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு இந்தியாவில்[இதர சில நாடுகள் உட்பட]உள்ள ஊடகங்கள் மிகத் தவறான தகவல்களைப் பரப்புவதாகத் ‘தெற்காசியப் பத்திரிகைச் சுதந்திர அறிக்கை’யில் கூறப்பட்டுள்ளது// என்பது ஊடகச் செய்தி.

அதன் விளைவாக.....

*ஊடகங்களின் மீதான நம்பிக்கை குறைந்துவருகிறது.

*சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய டிஜிட்டல் தளங்கள் மீது ஒடுக்குமுறைகள் கையாளப்படுகின்றன.


*போலித் தகவல்கள் அதிக அளவில் வெளியாகின்றன.


*ஊடக ஊழியர்கள் கடமையாற்றும் சூழல் மிக ஆபத்தானதாக உள்ளது.


*பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான் மாலத்தீவு போன்ற நாடுகளில் உள்ள ஊடக நிறுவனங்களைப் பலவீனப்படுத்தும் முயற்சியிலும் இந்திய அரசு ஈடுபடுகிறது.


* * * * *


https://www.maalaimalar.com/news/world/south-asia-press-freedom-report-on-india-772227 -மாலை மலர்11 மே 2025 5:54 AM [செய்திகள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் திருத்தியமைக்கப்பட்டுளன].