‘ஆபரேஷன் சிந்தூர்: ஐசி-814, புல்வாமா குற்றவாளிகள் உட்பட 100 பயங்கரவாதிகள் பலி' என்னும் தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது நம் ராணுவம்[மோடி அரசின் அனுமதியுடன்][https://tamil.indianexpress.com/india/]
பலியான 100 தீவிரவாதிகளில், லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த முடாஸர் காடியன்காஸ் & காலித் என்ற அபு அகாஷா; ஜெய்ஷ்-இ-முகமதுவைச் சேர்ந்த முகமது யூசுப் அசார், ஹபீஸ் முகமது ஜலீல் & முகமது ஹசன் கான் ஆகியோர் கொல்லப்பட்ட 5 பயங்கரவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தியில், ‘புல்வாமா குற்றவாளிகள் உட்பட’[இது பழைய[2019] நிகழ்வு. இது பற்றி இப்போது குறிப்பிடத் தேவையில்லை> 19 குற்றவாளிகளை அடையாளம் கானப்பட்டனர். ஆகஸ்ட் 2021 வாக்கில், முக்கிய குற்றவாளியும் ஆறு பேரும் கொல்லப்பட்டனர்> விக்கிப்பீடியா] என்று குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, பஹல்காமில் 26 பேரைப் படுகொலை செய்த நான்கு தீவிரவாதிகள் பற்றிய தகவல்கள் இடம்பெறாதது ஏன் என்பது நம் கேள்வி.
[நன்றி: https://suvanappiriyan.blogspot.com/2025/05/blog-post_11.html]
போர் முடிவடைந்துவிட்ட நிலையில் அரசின் இயலாமையை மறைத்து.....
100 பேர்களில் அவர்களும் அடக்கம் என்பது போல் செய்தி வெளியிட்டு, மோடி தான் மேற்கொண்ட சபதத்தை[“அவர்கள் பிடிக்கப்பட்டு நினைத்துப் பார்க்க இயலாத அளவுக்குத் தண்டனை வழங்கப்படும்”> மோடி] நிறைவேற்றப்பட்டுவிட்டதாக மக்களை நம்பச் செய்வதன் உள்நோக்கம் என்ன?
உள்நோக்கத்தை அனுமானித்துச் சொல்ல நாம் விரும்பவில்லை.
சொல்வது தேசத் துரோகமாகக் கருதப்படக்கூடும்!
* * * * *
அந்த நான்கு பேர்.....
* * * * *