//பாகிஸ்தான் மக்கள் தங்கள் அரசாங்கமும் ராணுவமும் தங்கள் சொந்த நலனுக்காகப் பயங்கரவாதத்தை ஆதரிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே, அவர்களின் வாழ்க்கையை அழிக்கும் அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவர அவர்கள் முன்வர வேண்டும். பாகிஸ்தான் மக்கள் அமைதிப் பாதையைத் தேர்வு செய்யாவிட்டால், அவர்கள் இந்திய ராணுவத்தின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும்// இது நம் பிரதமர் மோடி பாகிஸ்தான் மக்களுக்கு வழங்கிய அறிவுரை; எச்சரிக்கையும்கூட[https://www.dinakaran.com].
‘இந்தியா-பாகிஸ்தான்’ போர் முடிந்த பிறகு, மோடி தொடர்ந்து செய்யும் வெற்றி முழக்கங்களின் மூலம், பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் முதுகெலும்பை அவர் முறித்துவிட்டார்[மீண்டெழுந்து எப்போதும் போரிடவே முடியாத அளவுக்கு] என்பதை நம் மக்கள் சந்தேகமறப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
பாகிஸ்தான் தீவிரவாதிகளையும் அடியோடு அழித்து ஒழித்துக்கட்டிவிட்டார் என்பதையும் நாடு[ஒட்டுமொத்த உலகமும்] அறியும்.
தீவிரவாதிகளே இல்லாத நிலையில் அவர்கள் கையாண்ட பயங்கரவாதமும் ஒழிக்கப்பட்டுவிட்டது என்பது அறியத்தக்கது.
“ராணுவத்தின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும்” என்று பாக்கிஸ்தான் மக்களை எச்சரித்திருக்கிறார் நம் பிரதமர். தன் நாட்டு மக்களைக் காப்பதற்கான பொறுப்பும் அதற்கான பலமும் பாகிஸ்தானுக்கு இருக்கக்கூடும்[இந்தியாவின் பலத்தில் பத்தில் ஒரு பங்கேனும்] என்பதைப் புறக்கணித்து ஆர்ப்பரித்திருக்கிறார் அவர்.
இந்நிலையில், அஞ்சாநெஞ்சரான நம் பிரதமர் பாகிஸ்தானுடனான போரை மீண்டும் தொடங்கி நடத்தி[‘டிரம்ப்’ தலையிட்டுப் ‘போர் நிறுத்தம்’ செய்தார் என்பது 100% பொய்] நம் நீண்ட காலக் கனவான ஆசாத் காஷ்மீரை[பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ளது] மீட்டு நம் நாட்டுடன் இணைப்பார் என்பது நம் மக்களின் எதிர்பார்ப்பு.
வாழ்க நம் பிரதமர்! வெல்க இந்தியா!!
* * * * *
https://www.dinakaran.com/modi-calls-people-pakistan-eradicate-terrorism/