நம் இந்தியா வெகு விரைவில் நம்பர் 1 வல்லரசு நாடாகவுள்ளது.
இந்த நம் நாட்டின் பிரதமரான மோடி அவர்கள், பிரதமருக்குரிய கடமைகளை ஆற்றிமுடித்துப் பன்னாட்டு உறவுகளை மேம்படுத்துவதற்காக, அடிக்கடி அயல்நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்பவர் என்பது யாவரும் அறிந்ததே.
அயல்நாட்டவர் பெரிதும் மதிக்கும் வகையில், மிகக் கௌரவமான தோற்றத்துடன் அவர் காட்சியளிப்பது மிக மிக மிக அவசியம்.
அத்தகையதொரு கவர்ச்சியான தோற்றத்தைத் தலைவரொருவர்[சர்வ அலங்காரத்துடன் புது மாப்பிள்ளை போல என்று சொன்னால் அதில் தவறேதுமில்லை] பெறுவதற்கு.....
*விதம் விதமானதும், லட்சக்கணக்கான ரூபாய் விலைமதிப்புள்ளதுமான ஆடைகளை நேரம் தவறாமல் உடுத்துதல்,
*பிஎம்டபிள்யு, மெர்சிடெஸ் போன்ற கார்களில் பயணித்தல்,
*இறக்குமதி செய்யப்பட்ட உயர் ரகக் கைக்கடிகாரங்களை அணிதல்,
*உலகத்தரம் வாய்ந்த அயல்நாட்டு கைப்பேசி[ஃபோன்]யைப் பயன்படுத்துதல்,
*பல லட்சம் மதிப்புள்ள கண் கண்ணாடியை அணிதல்
என்றிப்படியாக, மிகவும் மதிக்கத்தக்க பொருள்களைப் பயன்படுத்துவது தவிர்க்க இயலாதது.
நம் பிரதமர் மோடியும் இந்த நடைமுறையைத்தான் பின்பற்றுகிறார்.
இதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு மனப்பக்குவம் இல்லாத காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஒருவர், மோடி அவர்கள் பயன்படுத்தும் இறக்குமதி செய்யப்பட்ட உயர் ரகப் பொருள்களைப் பட்டியலிட்டு அவரைக் கிண்டலடித்துள்ளார்.
நம் பிரதமரை இழிவுபடுத்தி இவரும் இவரைப் போன்ற காங்கிரஸ்காரர்களும் பதிவுகள் வெளியிடுவதற்கான உண்மைக் காரணம், எப்போதும் மிடுக்காகவும் கவர்ச்சியாகவும் காட்சிதரும் நம் பிரதமர் மீது கொண்ட பொறாமையே என்று உறுதிபடச் சொல்லலாம்.