எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

திங்கள், 19 மே, 2025

உடம்புக்குள் ‘உயிர்’ இருப்பது உண்மையா?

நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆகி, உயிர்வாயு[ஆக்சிஜன்] கலந்து, வேதியியல் மாற்றங்களைப் பெறுவதன் மூலம் சக்தியாக மாறுகிறது. அச்சக்தி செல்களிலும் ஊடுருவுகிறது. செல்கள் உரிய சக்தியைப் பெற்ற நிலையில் உடம்பு இயங்குகிறது. இந்தச் சக்தியை நம் உடம்பானது முற்றிலுமாக இழக்கும்போது அதன் இயக்கம் நின்றுபோகிறது; பின்னர் அழிந்துபோகிறது.

இவ்வகையில், உடம்பின் இயக்கத்திற்கு ஆதாரமாக அமைவது ‘சக்தியே’ என்பது அறியப்படுகிறது. இந்தச் சக்தியே ‘உயிர்’ என்று அழைக்கப்படுகிறது.

ஆக, உடம்புக்குள் பரவிக்கிடப்பது ‘சக்தி’ மட்டுமே; உயிர் என்று கூடுதலாக ஒன்று இல்லை[இந்தச் சக்தியை, ‘உயிர்ச் சக்தி’ என்றும் அழைத்துக்கொள்ளலாம்]. 

இது, இன்றைய அறிவியல் வழங்குகிற உடம்பின் இயக்கம் பற்றிய செய்தியாகும்.

எனவே, இனியேனும்..... 

நம் உடம்புக்குள் ஏதோ[உயிர், மனம்(ஆய்வுக்குரியது), ஆன்மா, ஆவி] “இருக்கு... இருக்கு... இருக்கு” என்று கிறுக்குத்தனமாய் உளறிக்கொண்டிருக்காமல், இருக்கும்வரை பிற மனிதர்கள் மீதும் ஏனைய உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்தி அமைதியாக வாழ்ந்திட முயற்சி செய்வோம்.

*   *   *   *   *
***எங்கோ எப்போதோ படித்ததை நினைவுகூர்ந்து பதிவு செய்ததன் மறுபதிப்பு இது.