நம் பிரதமர் மோடியின், ‘பஹல்காம் தாக்குதல்’ குறித்த உணர்ச்சி பொங்கும் அதிரடி ஆவேச உரை கீழே பதிவு செய்யப்பட்டுள்ளது[தினத்தந்தி].
மிக மிக இக்கட்டான சூழல்களில் ஒரு நாட்டின் பிரதமருக்குத் தேவைகளான பொறுமையும், உணர்ச்சிவசப்படாமல் உரையாற்றும் மனப் பக்குவமும் மோடியிடம் இல்லவே இல்லை என்பதை இவரின் ஆவேசப் பேச்சு அம்பலப்படுத்தியிருக்கிறது.
நம்மைப் போன்ற சராசரிக் குடிமக்களால் இவரின் பேச்சை விமர்சிக்க மட்டுமே முடிகிற சூழலில், ஏறத்தாழ ஒரு சர்வாதியாகவே செயல்படும் இவரைத் திருத்த எவருமே இல்லையா என்பது நம் ஆதங்கம்.
வாசியுங்கள்.
//பஹல்காமில், மதம் என்ன என்று கேட்கப்பட்டு, நம்முடைய சகோதரிகளின் முன்நெற்றியில் இருந்த சிந்தூர் அழிக்கப்பட்டது. 140 கோடி இந்தியர்களும் அதன் வலியை உணர்ந்தனர்[உண்மை... உண்மை... உண்மையே].
அந்தப் பயங்கரவாதிகளுக்கு, கற்பனை செய்துபார்க்க முடியாத தண்டனை[அதென்ன கற்பனை செய்ய முடியாத தண்டனை?!] அளிக்க முடிவு செய்யப்பட்டது.
* * * * *
#புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாரில் வியாழக்கிழமை பயங்கரவாதிகளுடனான மோதலில் ஒரு வீரர் கொல்லப்பட்டார். "நடந்து வரும் நடவடிக்கையின் போது, கடுமையான துப்பாக்கிச் சண்டை தொடர்கிறது. துப்பாக்கிச் சண்டையில் நமது துணிச்சலான வீரர்களில் ஒருவர் பலத்த காயமடைந்தார், சிறந்த மருத்துவ முயற்சிகள் இருந்தபோதிலும் உயிரிழந்தார்" என்று வைட் நைட் கார்ப்ஸ் X இல் பதிவிட்டுள்ளது# -Soldier killed during encounter with terrorists in J&K's Kishtwar