சனி, 14 ஜூன், 2025

அகமதாபாத் விமான விபத்து... இறந்த 270 பேரின் சிதறிய ரத்தம் உறைவதற்குள்.....

'மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டடத்தின் மீது அந்த விமானம் விழுந்து வெடித்துச் சிதறித் தீப்பிடித்தது[அகமதாபாத்தில்]. இந்த விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்பட 270 பேர் பலியாகியுள்ளனர்' -இது செய்தி.

'படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபர்களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார் பிரதமர் மோடி' -இதுவும் விபத்து தொடர்பாகப் பின்னர் வெளியான தகவல்.

மோடியின் ஆறுதல் மொழிகளால், பாதிப்புக்கு உள்ளான குடும்பத்தார்களின் துயர் முற்றிலுமாய்த் துடைக்கப்பட்டது எனலாம்.

இந்நிலையில்.....

மோடி, இந்தச் சோக நிகழ்வில் ஒரு பிரதமருக்கான கடமையைச் செவ்வனே செய்து முடித்த கையோடு, வழக்கமான தன் உலகச் சுற்றுலாவை நாளை தொடங்குகிறார் என்பது அண்மைச் செய்தி[பிரதமர் மோடி நாளை(ஜூன் 15) முதல் 4 நாள் அரசு முறைப் பயணமாகக் கனடா, சைப்ரஸ் நாடுகளுக்குச் செல்கிறார். கனடாவில் ஜூன் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்> ஊடகங்கள்].

இதற்கு முன்பு, மோடி உலகெங்கும் சுற்றுலாச் சென்று உலக நாடுகளுடனான நட்பைப் பலப்படுத்தியதன் விளைவுதான், பாகிஸ்தானுடன் நடந்த போரில் மிகப் பல நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்தன என்பது அறிந்து மகிழத்தக்கது.

இடையில் நின்றுபோன பயணத்தைத் தொடர்வதன் மூலம், மேலும் பல நாடுகளுடனான நட்பை மோடி உறுதிப்படுத்துவார் என்பதில் சந்தேகமே இல்லை.

“விமான விபத்தில் உயிரிழந்த 274 பேரின் சிதறிய ரத்தம் உறைவதற்குள்ளாக மோடி தன் சுற்றுலாவைத் தொடர வேண்டுமா?” என்று எவரும் கேள்வி எழுப்ப வேண்டாம்.

கேள்வி கேட்டவர்கள் பிரதமரை அவமதித்ததோடு தேசத்துக்குத் துரோகம் இழைத்த குற்றவாளிகளாகவும் கருதப்படுவார்கள்.