எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

ஞாயிறு, 15 ஜூன், 2025

தடையைத் தகர்க்கும் ‘அண்ணாமலையார்’ பக்தர்கள்... அல்ல, புத்தி பேதலித்தவர்கள்!!!


பாதுகாப்புக் காவலர்களை இடித்துத் தள்ளிக்கொண்டு, அண்ணாமலையார்’[குன்று வடிவில் குடிகொண்டிருக்கிறாராம்] என்று பெயர் சூட்டப்பட்ட கற்சிலையைக் காண முட்டி மோதிச் செல்லும் இவர்கள்[பக்தர்கள்?!] மனிதர்களே அல்ல; அம்மணக் கோலத்தில் காடுகளில் திரிந்த காட்டுமிராண்டிகளின் எச்சங்கள்.

‘அனைத்திற்கும் மேலான சக்திதான் கடவுள். அவர் அனைத்துப் பொருள்களிலும் இரண்டறக் கலந்திருக்கிறார்’ என்னும் முன்னோர்களின் கருத்தை[சரியோ தவறோ]ப் புரிந்துகொள்ளும் குறைந்தபட்ச அறிவுகூட இல்லாத இந்த முழு மூடர்களால் சமுதாயத்திற்கு கேடு விளையுமே தவிர கடுகளவும் நன்மை விளைந்திட வாய்ப்பில்லை.

எனவே,

தடுப்புகளைத் தகர்த்துக்கொண்டு கோயிலுக்குள் நுழையும் இந்த அறிவுக் குருடர்களைத் தடுத்து ஒழுங்குபடுத்தாமல், முட்டி மோதிக்கொண்டும் அடித்து உதைத்துக்கொண்டும் செத்துத் தொலைய அனுமதிப்பதே நாட்டு நலனுக்கு நல்லது என்பது நம் எண்ணம்.

“எண்ணிக்கையைப் பொருட்படுத்த வேண்டாம். அவர்களைச் சாக விடுங்கள்” என்பதே கோயில் நிர்வாகத்திற்கும் அரசுக்கும் நாம் விடுக்கும் கோரிக்கை!

                                               *   *   *   *   *
***மேற்கண்டது கடந்த கால நிகழ்வு. இன்றும் இதே நிலைமைதான்.