வியாழன், 15 மே, 2025

போர் வெற்றி[‘இந்.-பாக்.’]... வேண்டாமே வெற்று ஆரவாரம்!!!

டுத்தடுத்து வெளியான ஊடகச் செய்திகள், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போரில் நம் இந்தியா வெற்றிபெற்றது என்பதை உறுதிப்படுத்துகின்றன. 

ஆனால்.....

பகைவன் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட இழப்பில் பத்தில்[உண்மை நிலவரம் மோடி அரசுக்கே தெரியும்] ஒரு பங்கேனும் நமக்கும் நேர்ந்திருக்கும் என்பதை மறுக்க இயலாது.

ஒரே ஒரு உதாரணம் மட்டும்:

//Urba and Zain were among the 27 fatalities, including security personnel, resulting from the intense shelling in Jammu and Kashmir. Their father, Rameez, a teacher, sustained grave injuries in the same incident>ஜம்மு காஷ்மீரில் நடந்த கடுமையான ஷெல் தாக்குதலில் பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் உர்பா மற்றும் ஜைனும்[குழந்தைகள்] அடங்குவர். ஆசிரியரான அவர்களின் தந்தை ரமீஸ் அதே சம்பவத்தில் படுகாயமடைந்தார்> https://www.msn.com/en-in/news/world/born-together-died-together-poonch-twins-killed-in-pakistan-shelling/ar-AA1EJJ0F?ocid=winp2fptaskbarhover&cvid=d520312c1f6443598138a0480fe8c86d&ei=41//

உயிரிழந்தோரையும் அவர்தம் குடும்பங்கள்[+பகைவன் தரப்பில்] அனுபவிக்கும் தீராத துயரங்களையும்[+நமக்கு ஏற்பட்ட பிற இழப்புகள்] மறந்து ஆனந்தக் கூத்தாடுவது சரியல்ல.

வெற்றிச் செய்திகளை மக்களிடம் கொண்டுசேர்ப்பதும், அதன் மூலம் அவர்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பதும் தேவைதான். அதே நேரத்தில், நமக்குள்ள பலவீனங்களையும் நம் மக்கள் அறிந்திருந்தால்தான், தோல்விகளைச் சந்திக்கும்போது அவற்றை ஏற்கும் மனப் பக்குவத்தை அவர்கள் பெற முடியும் என்பதை மறத்தல் கூடாது. 

தோற்றவன்[பாகிஸ்தான்] பலவான் ஆகி, தக்க சமயத்தில் நம்மைப் பழிவாங்க முயல்வான் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

எனவே.....

பாகிஸ்தானின் தோல்விகளை மட்டுமே பட்டியலிட்டு அறிக்கைகள் வெளியிட்டு ஆர்ப்பரிப்பதால் பயன் ஏதுமில்லை.

காணொலி ஒன்றில்[இங்கே பதிவு செய்திருந்த காணொலி நீக்கப்பட்டுள்ளது!] குலை நடுங்கும் உலக நாடுகள்’ என்று கூச்சல் எழுப்பியிருக்கிறார்கள்.

உலக நாடுகள் ஏன் குலை நடுங்க வேண்டும்? உலகில் உள்ள அத்தனை நாடுகள் மீதும் இந்தியா போர் தொடுத்திருக்கிறதா?

நம்மவர்களுக்குச் சிந்திக்கும் அறிவே இல்லை என்பதை உலகறிய இப்படிப் பறைசாற்றலாமா?

இன்னும் சொல்ல எவ்வளவோ உள்ளன; சொல்ல விரும்பவில்லை; சொல்லவும் கூடாது.