//‘பீட்ஸா’ என்னும் உணவுப் பொருளை வினியோகித்த ஊழியரிடம் ‘மராத்தி’ மொழியில் பேசுமாறு வற்புறுத்தியதோடு, பேசாத[இயலாத?] அவருக்குத் தரவேண்டிய தொகையைத் தர மறுத்தார்கள் ஒரு மராத்தியத் தம்பதியர்// என்பது இன்று[14.05.2025] காலை 06.30 மணியளவில் ‘சன்’ தொலைக்காட்சியில் வெளியான செய்தி.
இது கண்டிக்கத்தக்கதல்ல, கை குலுக்கிப் பாராட்டி மகிழ்வதற்குரிய செயல் ஆகும்.
இது அரிதான ஒரு நிகழ்வாக இருத்தல் கூடாது.
இந்த ‘மொழிப் பற்று’... அல்ல, ‘மொழி வெறி’ மராட்டிய மாநிலத்திலுள்ள அத்தனைத் தம்பதியருக்கும் மட்டுமல்ல, அத்தனைக் குடிமக்களுக்குமான அவசியத் தேவை ஆகும்.
இந்தியைத் தாய்மொழியாகக்கொண்டவர்களில் மிகப் பெரும்பாலோர்[அத்தனைப்பேரும்?] இந்தி வெறியர்களாக இருக்கிறார்கள். இருப்பதால்தான் இந்தியாவெங்கும் அந்த அரைவேக்காட்டு மொழி ஆதிக்கம் செலுத்துகிறது.
மோடி, அமித்ஷா கூட்டத்தார் அதை வளர்த்து[+மதவெறி, மூடநம்பிக்கைகள்]த் தங்களையும் வளர்த்துக்கொள்கிறார்கள்; ஆட்சியில் நீடிக்கிறார்கள்.
எனவே, ‘இந்தி’யர் அல்லாத அனைவருக்குமான நம் வலியுறுத்தல்:
“உங்களின் தாய்மொழிப் பற்றைத் ‘தாய்மொழி வெறி’யாக மாற்றுவீர்! இந்தி ஆதிக்கம் தகர்க்கப்பட்டு, அனைத்து மாநில மொழிகளையும்[ஆட்சி மொழி & அலுவல் மொழி]அரியணையில் ஏற்றப் பாடுபடுவீர்!!