எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வெள்ளி, 9 மே, 2025

இந்தி மட்டுமே அறிந்த ‘ஆதிக்க வெறி’ச் சங்கிகளுக்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி!!!

நாட்டை ஆளும் ‘பாஜக’ சங்கி அமைச்சர்களில் பெரும்பாலோருக்கு இந்தி மட்டுமே சரளமாகப் பேசவரும்[அறிவியல் மொழியாம் ஆங்கிலத்தையும்  படியுங்கள் என்றால், “அது ஆங்கிலேயனுக்கு நாம் அடிமைகளாய் இருந்ததன் அடையாளம்; இந்தியே நம் தேசிய மொழி என்பார்கள்].

அமைச்சர்களின் நிலையே இதுவென்றால், பிற வடநாட்டவன்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம்[முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் இது குறித்துத் தெளிவான அறிக்கை வெளியிட்டுள்ளார்].

ஆனாலும், இந்த அரைவேக்காடு மொழியைப் புறக்கணிக்கும் தமிழர்கள் மீது[+மலையாளிகள், கன்னடர்கள், வங்காளிகள்] இதைத் திணித்து இவர்களின் தாய்மொழிப் பற்றைச் சிதைத்தழிப்பது இவன்களின் நெடுநாள் கனவு.

தமிழனாய்ப் பிறந்த, தமிழ்நாட்டிலுள்ள இவன்களின் கொத்தடிமைகளில் ஒருவனைத்[வழக்குரைஞனாம்] தூண்டிவிட்டு, ‘தமிழ்நாடு அரசு[+கேரளா, கர்னாடகா, மேற்கு வங்காள அரசுகள்] மும்மொழிக் கொள்கையை ஏற்க உத்தரவிட வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கவைத்தான்கள்.

இவன்களின் இந்தி வெறிக்குச் சவுக்கடி கொடுத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

இது தொடர்பான செய்தி கீழ்க்காணும் காணொலிகளில்.