எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

கடவுள் மறுப்பாளர்கள் இந்துமதத்தை மட்டும் சாடுவது ஏன்?

பெரியார் குறித்த, நடிகர் ரஜினியின் மெய்யும்[சாமி படங்கள் செருப்பால் அடிக்கப்பட்டது] பொய்யும்[படங்கள் அம்மணக் கோலத்தில் இருந்ததாகச் சொல்வது]  கலந்த உரை தொடர்பாகக் காரசாரமான வாதப்பிரதிவாதங்கள் இன்றளவும் நடைபெற்றுக்கொண்டிருப்பது நாம் அறிந்த ஒன்று. 

இப்பிரச்சினை குறித்து, நாடறிந்த மிகச் சிறந்த சிந்தனையாளரும் கடவுள் மறுப்பாளருமான கொளத்தூர் மணி அவர்கள் ஆனந்த விகடன்[6.2.2020] வார இதழுக்கு அளித்த பேட்டியில் தம் கருத்துகளை முன்வைத்துள்ளார். அப்பேட்டியிலிருந்து ஒரு சிறு பகுதியை இங்கே பதிவு செய்திருக்கிறேன்.

கேள்வி:
இந்துமதத்தை  மிகக் கடுமையாக விமர்சிக்கிற நீங்கள், மற்ற மதங்களிலும் உள்ள மூடநம்பிக்கைகளையும் ஆபாசங்களையும் இது போல் விமர்சிப்பதில்லையே, பயமா? 

கொளத்தூர் மணி அவர்களின் பதில்:
நன்றி: விகடன்





சுத்தம் என்ன விலை[இந்துக் கோயில்களில்]?

தேவாலயங்களிலும், பள்ளிவாசல்களிலும் இருக்கும் சுத்தம் இந்துக் கோயில்களில் பேணப்படுகிறதா? இந்துக்களின் வழிபாட்டு முறையே அசுத்தமாக இருக்கும்போது, கோயில்கள் மட்டும் எப்படி சுத்தமாக இருக்க முடியும்?
அங்கப் பிரதட்சணம் செய்கிறோம் என்று கோயில் முழுக்க தண்ணீர் ஊற்றுகிறார்கள். தேங்காய், பூசணிக்காயை கோயில் வாசலில் உடைத்து குப்பையாக்குகிறார்கள். அபிஷேகம் செய்கிறோம் என்று பால், மஞ்சள், இளநீர், தேன், சர்க்கரைப் பொங்கல், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், தயிர், விபூதி, குங்குமம், நெய் ஆகியவற்றை சிலைகளின் மீது கொட்டுகிறார்கள். அபிஷேகத்திற்குப் பின் இதே பொருட்கள் குப்பையாக கோயிலின் பின்புறம் சேர்கின்றன. பிரசாதத்தை சாப்பிட்ட பின்பு, இலையை அப்படியே கோயில் சுவருக்கு வெளியே எறிகிறார்கள்.
கோயிலில் தரப்படும் விபூதி, சந்தனத்தைப் பூசியதுபோக, சுவர்களில் தேய்க்கவோ, பிரகாரத் தூண்களின் கீழ்ப்புறத்தில் கொட்டவோ செய்கிறார்கள். தமிழர்களின் கட்டடக்கலைக்குப் புகழ் பெற்ற சாட்சியமாக இருக்கும் தஞ்சைப் பெரிய கோயிலின் சுவரிலும் இப்படித்தான் அசிங்கப்படுத்தி இருக்கிறார்கள்.
கோயில்களில் பொங்கல் வைத்துவிட்டு, கற்களையும், கரித்துண்டுகளையும் குப்பையாகப் போட்டுவிட்டுச் செல்கிறார்கள். அன்னதானம் போட்டுவிட்டு, எச்சில் இலைகளைக் கோயில் சொத்தாக விட்டுச் செல்கிறார்கள். சட்டி விளக்கு, எலுமிச்சை விளக்கு ஏற்றுகிறோம் என கோயில் பிரகாரங்களில் எண்ணெய் கொட்டுகிறார்கள். விளக்கு ஏற்றிய கையோடு, நம் கடமை முடிந்துவிட்டது எனக் கிளம்பி வந்துவிடுகிறார்கள். அவற்றை அகற்றும் வேலை அடுத்தவர் தலையில்தான் விழுகிறது. தீர்த்தமாடிவிட்டு ஈரம் சொட்டச் சொட்டக் கோயிலைச் சுற்றி வருகிறார்கள்.
மிகவும் சுத்தமாக இருக்கும் தேவாலயங்களில் (இந்துக்களின் வழிபாட்டு முறைகளைப் பின்பற்றும் RC தேவலாயங்களை நான் குறிப்பிடவில்லை) செருப்பு அணிந்து போக முடிகிறது. ஆனால் அசுத்தமாக இருக்கும் இந்துக் கோயில்களில் செருப்பு அணியாமல்தான் போக முடியும். இந்துக்களின் புகழ் பெற்ற கோயில்களான இராமேஸ்வரம், சபரிமலைக்குள் ஓர் அந்நிய நாட்டு சுற்றுலாப் பயணியை செருப்பில்லாமல் போகச் சொன்னால், அவர் என்னவிதமான அருவெறுப்புக்கு உள்ளாவர் என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
வழிபாட்டு முறை இப்படி இருந்தால் கோயில் எப்படி சுத்தமாக இருக்கும்? இன்னொரு முக்கிய காரணம், பொது இடங்களை சுத்தப்படுத்தும் வேலை சமூகத்தின் அடித்தட்டில் அழுத்தி வைக்கப்பட்டிருக்கும் அருந்ததிய மக்களிடம் திணிக்கப்பட்டுள்ளது. அதனால் மற்ற சாதியினர் சுத்தத்திற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என ஒதுங்கிக் கொள்கின்றனர்.
புனிதமாக நினைக்கும் கோயிலையே இந்த இலட்சணத்தில்தான் பராமரிக்கிறார்கள் என்றால், மற்ற இடங்கள் சுத்தமற்று இருப்பது பற்றிச் சொல்ல  வேண்டுமா?============================================================================
நன்றி: கீற்று நந்தன்[keetru.com ஆசிரியர்]