எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

கடவுள் மறுப்பாளர்கள் இந்துமதத்தை மட்டும் சாடுவது ஏன்?

பெரியார் குறித்த, நடிகர் ரஜினியின் மெய்யும்[சாமி படங்கள் செருப்பால் அடிக்கப்பட்டது] பொய்யும்[படங்கள் அம்மணக் கோலத்தில் இருந்ததாகச் சொல்வது]  கலந்த உரை தொடர்பாகக் காரசாரமான வாதப்பிரதிவாதங்கள் இன்றளவும் நடைபெற்றுக்கொண்டிருப்பது நாம் அறிந்த ஒன்று. 

இப்பிரச்சினை குறித்து, நாடறிந்த மிகச் சிறந்த சிந்தனையாளரும் கடவுள் மறுப்பாளருமான கொளத்தூர் மணி அவர்கள் ஆனந்த விகடன்[6.2.2020] வார இதழுக்கு அளித்த பேட்டியில் தம் கருத்துகளை முன்வைத்துள்ளார். அப்பேட்டியிலிருந்து ஒரு சிறு பகுதியை இங்கே பதிவு செய்திருக்கிறேன்.

கேள்வி:
இந்துமதத்தை  மிகக் கடுமையாக விமர்சிக்கிற நீங்கள், மற்ற மதங்களிலும் உள்ள மூடநம்பிக்கைகளையும் ஆபாசங்களையும் இது போல் விமர்சிப்பதில்லையே, பயமா? 

கொளத்தூர் மணி அவர்களின் பதில்:
நன்றி: விகடன்