//இந்த நாளில் தங்களது தொழிலுக்குப் பயன்படும் கலப்பை, கருவிகள், ஆயுதங்கள், வாகனங்கள், புத்தகங்கள் போன்றவற்றை வைத்து இறைவழிபாடு செய்யப்படுகிறது. இதனை அஸ்திரப் பூஜை என்றும் அழைப்பர். பூஜைக்காக வைக்கப்பட்ட பொருட்கள் மறுநாள் விஜயதசமிவரை எடுக்கப்படாமல் இருக்கும். இவ்வாறு வழிபடுவதன் மூலம் தொழில் வளர்ச்சியும், கல்வியில் சிறந்த தேர்ச்சியும் பெற இயலும் என்று இந்துச் சமயத்தவர்கள் நம்புகின்றனர்// -விக்கிப்பீடியா.
அறிவின்மை மட்டுமல்லாமல், உணர்தல் திறனும் இல்லாத சடப்பொருள்களை வழிபடுவது மூடத்தனங்களில் ஒன்று. காரணம், நாம் செய்யும் வழிபாட்டை ஏற்கும் திறன் அவற்றிற்குக் கொஞ்சமும் இல்லை என்பதே[மனிதர்களின் சிந்திக்கும் அறிவைச் சிதைப்பதையே தொழிலாகக்கொண்ட நாசகாரக் கும்பல் செய்த சதி இது].
எந்தவொரு விழாவாயினும் கொண்டாட்டமாயினும் அது ஆறறிவால் ஏற்கத்தக்கதாக அமைவதே மக்களுக்கு நல்லது.
ஆட்சியாளர்களும் சமூகவியலாளர்களும் மக்களும் சிந்திப்பார்களா?

