எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 1 ஜனவரி, 2023

‘மாரடைப்பு’... மறக்கவே கூடாத ‘அவசர’ முதலுதவிச் சிகிச்சை!

‘இதயத்துடிப்பு நின்ற ஒருவருக்கு உடனடியாக, சி.பி.ஆர்[விளக்கம் கீழே] முதலுதவி செய்யப்படவில்லை என்றால் அடுத்த ஒவ்வொரு நிமிடமும் அவர் உயிர் பிழைப்பதற்கான சாத்தியக்கூறு 10 சதவீதம் குறைவதாக ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது` என அலபாமா பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்வித்துறை இணைப் பேராசிரியரான மைக்கேல் குர்ஸ் தெரிவித்துள்ளார்.


பிழைப்பதற்கான வாய்ப்பு நிமிடத்திற்கு 10% குறையும் என்றால், பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லாத நிலை[100%] உருவாவது 10 நிமிடங்களில் என்று அறியலாம்.


ஆக, மாரடைப்புக்கு ஆளானவரின் இதயத் துடிப்பு நின்றுபோன 10 நிமிடங்களுக்குள் நெஞ்சுப் பகுதியை விட்டுவிட்டு அமுக்குதல்[மீளுயிர்ப்புச் சுவாசச் சிகிச்சை -CPR-] என்னும் முதலுதவிச் சிகிச்சையைச் செய்தால், மீண்டும் இதயம் இயங்க ஆரம்பித்து[நாடித் துடிப்பின் மூலம் அறியலாம்] அவர் உயிர் பிழைத்தெழ வாய்ப்புள்ளது[அடுத்து, மருத்துவமனைச் சிகிச்சையை மேற்கொள்ளலாம்] என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.


10 நிமிடங்கள் இந்தச் சிகிச்சையை[CPR நெஞ்சை விட்டுவிட்டு அமுக்கிவிடுதல்]ச் செய்தாலே பாதிக்கப்பட்டவர் உயிர்பிழைக்க வாய்ப்புள்ளது என்னும் நிலையில், 29.12.2022ஆம் நாள் பெங்களூருவில், மாரடைப்புக்கு ஆளாகி, நாடித்துடிப்பை இழந்து கிடந்த ஒருவருக்கு, சற்றுத் தொலைவில் கடைவீதிக்கு வந்திருந்த ஒரு மருத்துவர்[டாக்டர்] தகவலறிந்து அவரை அணுகி, 10 நிமிடங்கள் மேற்கண்ட சிகிச்சையைச் செய்து உயிர் பிழைக்க வைத்துள்ளார் என்பது செய்தி[காணொலி கீழே உள்ளது].


இதே போல, அமெரிக்காவைச் சேர்ந்த[வடக்கு கரோலினா] 36 வயது இலைஞருக்கு, மாரடைப்பு ஏற்பட்டு, நாடித் துடிப்பு நின்றுபோன நிலையில், தகவல் அறிந்து வந்த இரு காவலர்கள் 40 நிமிடங்கள் சிகிச்சை அளித்துக் காப்பாற்றினார்கள் என்பதும் அறியத்தக்க நிகழ்ச்சியாகும்[https://www.bbc.com/tamil/global-40641750].

தன்னை காப்பாற்றிய காவல்துறை அதிகாரிகளுடன் ஜான் ஆக்பர்ன்


பெங்களூரு நிகழ்வுக்கான காணொலியின் முகவரி:

https://twitter.com/i/status/1608511249440202752  -29 டிச., 2022


***மருத்துவர் சிகிச்சை[CPR] அளிக்கும் முறையை ஊன்றிக் கவனித்து மனதில் பதிவு செய்துகொள்ளுதல் மிகவும் பயனளிப்பதாகும்.


***CPR … மீளுயிர்ப்புச் சுவாசம் அல்லது இதய நுரையீரல் செயல் தூண்டல் என்பது சுயநினைவு அற்ற சுவாசம் இல்லாத ஒருவருக்கு வைத்தியசாலையிலோ, முதலுதவி வண்டியிலோ அல்லது முதலுதவியாளரால் சுயநினைவு வரும்வரை வழங்கப்படும் சுவாசம் ஆகும்]

===========================================================================

இவர் மதகுருவா, ஜோதிடரா, மனநலம் குன்றியவரா?!?!

"வருங்காலத்தில் இந்தியா முஸ்லிம் தேசமாக மாறும். 100 ஆண்டுகளில் இந்தியாவை முஸ்லிம்கள் கைப்பற்றினால், அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை இடித்துவிட்டு, அதற்குப் பதிலாக மசூதி கட்டப்படும்.

பாபர் மசூதி அழிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக இந்துக் கோவில் எழுப்பப்பட்டதும், அதற்கு இந்தத் தேசத்தின் பிரதமர், அரசியலமைப்புச் சட்டத்தை மீறி அடிக்கல் நாட்டியதும் இந்திய வரலாற்றில் பதிவு செய்யப்படும்”

என்றிப்படி ஓர் அதிரடியான கணிப்பை வெளியிட்டிருப்பவர் ஒரு ஜோதிடர் என்றால் அது குறித்துக் கருத்துச் சொல்லவோ கவலைப்படவோ ஒன்றுமில்லை.

கணித்தவர், அகில இந்திய இமாம் சங்கத்தின் தலைவர் மௌலானா சஜித் ரஷித் என்பது, இந்து மதவாதிகளை மட்டுமல்ல, அரசியல்வாதிகளை மட்டுமல்ல, இஸ்லாம் மக்களை உள்ளடக்கிய இந்தியக் குடிமக்களைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் ஊடக[டைம்ஸ் நவ்]ச் செய்தியாகும்.

‘டைம்ஸ் நவ்’ ஊடகத்தை மேற்கோள் காட்டி இந்தச் செய்தியை வெளியிட்டுள்ள msn.com இதற்கு.....

‘முஸ்லிம் மதகுரு மௌலானா சாஜித் ரஷிதி விஷத்தைக் கக்குகிறார்’ என்று தலைப்பிட்டுள்ளது.

இந்தியாவில் அமைதியாக வாழ்ந்திட விரும்பும் இஸ்லாம் மக்களின் நல்வாழ்வைக் கருத்தில் கொள்ளாமல், மேற்கண்டவாறு பேசிய மௌலானா உண்மையில் விஷத்தைத்தான் கக்கியிருக்கிறாரா?

"ஆம்” என்றால் அதற்கான காரணம் என்ன?

மீண்டும் இடுகையின் தலைப்பை வாசியுங்கள்.

மேற்கண்ட கேள்விக்கான நம் பதில்.....

மௌலானா மனநலம் குன்றியவர் என்பதே.