எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வெள்ளி, 30 ஜூன், 2023

ஆளுநரா, அமித்ஷாவா, இந்தியக் குடிமகனா... இவர்களில் அப்பாவி யார்?!

ரு மாநிலத்தின் ஆளுநர் நியமனம் என்பது, அதிகாலையில் சம்பந்தப்பட்டவரைத் தடாலடியாய் வரவழைத்து, “நீங்கதான் இந்த[சம்பந்தப்பட்ட] மாநிலத்தின் கவர்னர். இப்பவே புறப்பட்டுப் போய்ப் பதவி ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று அதிரடியாய் உத்தரவு பிறப்பிக்கும் செயலல்ல.

சில மாதங்களுக்கு முன்பே, குறைந்தபட்சம் கொஞ்சம் வாரங்களுக்கு முன்பாவது அவருக்கு முன்னறிவிப்புச் செய்து, அவருக்கான[ஆளுநர்] அதிகாரங்கள் பற்றி அறிந்துகொள்ள அவகாசமும் தந்த பிறகே அவரைப் பதவி ஏற்க அனுமதிக்க வேண்டும்.

தவறினால், அவர் ஆளுநர் ஆன பிறகேனும், தனக்குரிய அதிகாரங்களைச் சட்ட நிபுணர்களின் உதவியுடன் அறிந்துகொள்வது கட்டாயம்.

இவ்வாறு ஆளுநருக்கான தகுதியை வளர்த்துக்கொள்ளாமல் ஒருவர் அந்தப் பதவியை ஏற்பதும் அதில் நீடிப்பதும் பல நிர்வாகப் பிழைகளுக்கு வழிவகிக்கும். 

அமைச்சர் செந்தில் பாலாஜியைப் பதவி நீக்கம் செய்வதாக உத்தரவு பிறப்பித்த ஐந்து மணி நேரத்தில் அதை நிறுத்தி வைப்பதாகத் தமிழ்நாடு ஆளுநர் அறிவித்திருப்பது, அவர் தன் பதவிக்கான தகுதியை வளர்த்துக்கொள்ளவில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது.

ஆளுநர் என்பவர் அனைத்துச் சட்ட விதிகளையும் அறிந்திருப்பது சாத்தியமில்லை என்றாலும், மிக மிக முக்கிய முடிவுகளை[செந்தில் பாலாஜி பதவி நீக்கம் போல], சட்ட நிபுணர்களை மட்டுமல்லாமல், உள்துறை அமைச்சர், பிரதமர் போன்ற, தனக்கும் மேலான அதிகாரம் படைத்தவர்களைக் கலந்தாலோசிப்பது மிக மிக மிக மிகவும் அவசியம்.

இந்த நியதியை ஆளுநர் ரவி அறிந்திருக்கவில்லையா? மேற்கண்டவர்களைக் கலந்தாலோசிக்கவில்லையா?

அறியாமலும், கலந்தாலோசிக்காமலும் அதிரடியானதொரு உத்தரவை எப்படிப் பிறப்பித்தார்?

இந்த அவசரகதியிலான உத்தரவால் பாலாஜியின் மனமும் உடலும் பாதிக்கப்படலாம் என்று யோசிக்காதது ஏன்?

யோசிக்காததற்கான காரணம் எதுவாகவோ இருக்கட்டும். ‘உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தலையீட்டின் பேரில் ஆளுநர் ரவி தன் உத்தரவை நிறுத்தி வைத்துள்ளார்’ என்பது இன்று பிற்பகலில் வெளியான ஊடகச் செய்தி.

இந்தியா குடியரசாகி 74 ஆண்டுகள் ஆகின்றன.

இத்தனை ஆண்டுகளாக, ஒரு மாநிலத்தின் ஆளுநருக்கான அதிகார வரம்பு குறித்து மேல்மட்ட அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும், அரசுக்கு ஆலோசனை வழங்குகிற சட்ட நிபுணர்களும் அறிந்திருக்கவில்லையா?

அறியாமலிருந்து, இப்போதுதான்[ஆளுநரின் உத்தரவைச் சட்ட ரீதியாகச் சந்திப்போம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த பிறகு] சட்ட விதிகளை அலசி ஆராய்ந்து அறிந்துகொண்டார்களா?

அதனால்தான் ஆளுநருக்கு முன்கூட்டியே அலோசனை வழங்குவது சாத்தியம் ஆகாமல்போனதா?

இதற்குமேலும் கேள்விகள் கேட்பதற்கு ஒரு சாமானியக் குடிமகனுக்கு ‘நல்லதல்ல’ என்பதால் இத்துடன் முடிக்கிறேன்!



தமிழின் புகழ் பரப்பும் மோடியும், தமிழை வெறுக்கும் ‘பாஜக’ சாக்கடைப் பன்றிகளும்!!!

காசியில் தமிழின் சிறப்புகளைப் பறைசாற்றுதற்கென்று மாநாடு நடத்தியது, சொற்பொழிவாற்றும்போது திருக்குறளை மேற்கோள் காட்டுவது, சங்கப் பாடல் வரிகளை எடுத்தாள்வது,  பயணிக்கும் நாடுகளிலெல்லாம் மறவாமல் அதன் பெருமை பேசிப் பெருமிதப்படுவது என்று பல வகையிலும் தமிழ் மொழிக்குப் புகழ் சேர்த்திருக்கிறார் பிரதமர் மோடி என்பது மறுக்க முடியாத உண்மை.

அவர் செய்யும் அரசியல் நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் நாம் என்ற வகையில் அவருக்குப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறோம்.

அவரின் செயல்பாடுகளில், தமிழரிடையே செல்வாக்கும் பெறுவது உள்நோக்கமாக இருப்பினும் அதை நாம் பொருட்படுத்தாமல் அவரை மனதாரப் பாராட்டுதல் வேண்டும்.

மோடி அவர்களைப் பாராட்டுகிற அதே வேளையில், ‘பாஜக’ கட்சியிலுள்ள சில தறுதலைகள் தமிழுக்கு எதிராகச் செயல்படுவதை அவரின் கவனத்துக்குக் கொண்டுசெல்வதும், அவர்களைக் கட்சியிலிருந்து வெளியேற்றுமாறு ‘த.நா.பாஜக’ தலைவர் அண்ணாமலை அவர்களிடம் கோரிக்கை வைப்பதும் நம் விருப்பமாக உள்ளது.

ஒசூர் ரயில் நிலையம் அருகிலுள்ள ஒரு கோயிலில் நடக்கவிருந்த குடமுழுக்கு விழாவைத் தமிழில் நடத்த வேண்டும் என்று தமிழார்வலர்கள் கோரிக்கை வைக்க, அர்ச்சகர்கள், தமிழ், சமற்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் நடத்தலாம் என்று ஒத்துக்கொண்ட நிலையில்.....

மஞ்சுநாத், வினோத் என்னும் இரு சொறிநாய்கள்[பாஜக] தலையிட்டு, தமிழில் நடத்தக்கூடாது என்று கூறிக் குழப்பம் விளைவித்ததோடு, தமிழினப் பற்றாளர்கள் மீது தாக்குதலும் நடத்தியிருக்கிறார்கள். இவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது கூடுதல் செய்தி.


இந்தச் சாக்கடைப் பன்றிகள் மீது, உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுப்பது அண்ணாமலை அவர்களின் கடமையாகும்.

அவர் தவறாமல் இதைச் செய்வார் என்பது நம் நம்பிக்கை. ஒரு வேளை.....

இதை அவர் செய்யத் தவறினால், தமிழின் மீது மிகுந்த பற்றுக்கொண்ட பிரதமர் மோடி அவர்களின் வெறுப்புக்கு அவர் ஆளாவார் என்பதை அவருக்கு நினைவுபடுத்துகிறோம்.