வெள்ளி, 21 ஜூன், 2024

நாட்டுப்பண் ‘ஜனகணமன...’ பாடலுக்குத் தமிழாக்கம் தேவை!

இந்தியா சுதந்திரம் பெற்றுக் குடியரசு நாடான நிலையில் இந்த நம் நாட்டுக்கான தேசியக் கீதம் ரவீந்திரநாத் தாகூரால் வங்க மொழியில் உருவாக்கப்பட்டது. 

அது ‘ஜனகணமன...’ என்று தொடங்கி முடியும் பாடல் என்பது அனைவரும் அறிந்ததே.

இன்றளவும் நாட்டுப்பண்ணாக அரசு விழாக்கள் நிறைவடையும்போது இது பாடப்படுகிறது.

நாம் அனைவரும் இந்தியர்தான். ஆனாலும், புரியாத வங்க மொழியில் நாட்டுப்பண் இசைப்பதைத் தவிர்த்து அவரவர் தாய்மொழியில் அதைச் செய்வதே ஏற்புடையதாகும்[‘இந்தியா ஒரே நாடு; ஒரே மொழியில் நாட்டுப்பண்’ என்னும் நடைமுறை தேவையில்லை].

இது வேறு வேறு மொழியைத் தாய்மொழியாகக்கொண்ட அனைத்து இந்திய மாநில மக்களுக்கான உரிமையும் ஆகும்.

நாடு சுதந்திரம் பெற்ற சூட்டோடு இந்த உரிமையை அனைத்து மாநிலத்தவரும் போராடியேனும் பெற்றிருந்தால்.....

“இந்தியா ஒரே நாடு. இதற்கான ஒரே மொழி இந்தி” என்று முழக்கமிட்டு, 35%[?] ‘இந்தி’யர் இந்தியைத் திணிப்பதும் திணித்துக்கொண்டிருப்பதும், நீட், வரி விதிப்பு[ஜிஎஸ்டி] போன்ற மாநிலங்களுக்கான உரிமைப் பறிப்புகளும் நிகழ்ந்திரா.

இனியேனும் விழிப்புணர்வு பெற்று, நாட்டுப்பண்ணைத் தாய்மொழியில் பாடுதல் தொடங்கி, இழந்த உரிமைகளை, கடும் போராட்டம் நடத்தியேனும் திரும்பப் பெறும் முயற்சியைச் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மேற்கொள்ளுதல் வேண்டும்.

இதுவே அதற்கான தக்கத் தருணமும் ஆகும்.