எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 19 மார்ச், 2024

“எதிர்க்கட்சிகளுக்கு அழிவு தொடங்கிவிட்டது”! மார்க்கண்டேயன் மோடி வாழ்க!!


சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் இன்று பாஜக பொதுக்கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று 1 மணியளவில் கலந்துகொண்டு பேசினார்.

அவர் பேச ஆரம்பிக்கையில், பாரத் மாதா கி ஜே... பாரத் மாதா கி ஜே...” என்று பாஜக தொண்டர்கள் உற்சாகத்துடன் கோஷம் எழுப்பினார்கள்.

மோடியோ, பாரத அன்னை வாழ்க[என்னுடைய தமிழ் சகோதர சகோதரிகளே வணக்கம்]” என்று தமிழன்னையை வாழ்த்தித் தன் பேச்சைத் தொடங்கியிருக்கிறார்.


தமிழன்னைக்கு மோடி செலுத்திய இந்த மரியாதையை அவரின் அடிப்பொடிகள் செலுத்தத் தவறியது எப்படி?


இத்தனைக் காலமும், மோடி போன்ற ‘இந்தி’ய ‘பாஜக’ தலைவர்களும், இங்குள்ள கொத்தடிமைகளும், அவர்களிடையே பேசும்போதெல்லாம், “பாரத் மாதா கி ஜே” என்று சொல்லிச் சொல்லி அதை அவர்களின் நாடி நரம்புகளிலெல்லாம் ஊடுருவி அழுத்தமாகப் பதியும்படி செய்திவிட்டார்கள் என்பதுதான் காரணம்.


அதன் விளைவுதான், இன்றைய அவர்களின், “பாரத் மாதா கி ஜே” என்னும் முழக்கம் கோஷம்.


பாவம் அவர்கள்! தங்களின் தலைவர், “தமிழன்னை வாழ்க” என்று பேச்சைத் தொடங்கவிருப்பதை அண்ணாமலையார் போன்ற தமிழ் மண்ணின் மைந்தர்கள் முன்கூட்டியே சொல்லியிருந்தால் அவர்களும் தமிழன்னையை நினைவுகூர்ந்து வாழ்த்தியிருப்பார்கள்.


எது எப்படியோ, மோடியின் வாயால் வாழ்த்துப்பெறும் பேறு தமிழன்னைக்குக் கிடைத்துவிட்டது.


இனி சமஸ்கிருதத்திற்கும் இந்திக்கும் செலவிடுவது போல், கோடி கோடி கோடியாய்த் தனக்கும் செலவிடுவார் என்று நம்பி, அவரின் பெருந்தன்மையை எண்ணி எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடிப்பார் தமிழன்னை.


அந்தக் கண்ணீர் தமிழ்நாடெங்கும் பெரு வெள்ளமாய்ப் பரவி வழிந்தோடும்.


தமிழ் மக்களும் நெஞ்சம் நெகிழ்ந்தவர்களாக, மோடியின் ‘பாஜக’ வேட்பாளர்களுக்கே வாக்களிப்பார்கள்.

இந்து மதத்தை அழிக்க நினைத்தவர்கள்[கொள்ளையடிப்பதையே குறிக்கோளாகக் கொண்ட ‘தி.மு.க.’ உட்பட] அழிந்துபோய் இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளுக்கு அழிவு தொடங்கி இருக்கிறது” என்று அவர் சாபம் கொடுத்தது போலவே, அனைத்து எதிர்க்கட்சிகளும் அழிந்தொழிய, மார்க்கண்டேயன் போல என்றும் பதினாறு அகவையராக இந்தப் பாரத தேசத்தைப் பரிபாலனம் செய்து மக்களனைவரையும் சுபிட்சம் பெறச் செய்வார் நரேந்திர மோடி! 


                                   *   *   *   *   *


https://tamil.oneindia.com/news/salem/india-alliance-which-criticizes-hinduism-is-not-criticizing-any-other-religion-pm-modi-592055.html


வள்ளுவருக்குக் காவித் துண்டு போட்ட ‘பாஜக’ சங்கிக் கழிசடைகள்!!!

திருவள்ளுவரின் ‘திருக்குறள்’ உலகப் ‘பொதுமறை’ என்று போற்றப்படுவதற்கான காரணங்கள்.....

*அர்த்தமுள்ள அமைதியான வாழ்வுக்குத் தேவையான நன்னெறிகளைத் திருக்குறளில் வகுத்தளித்த வள்ளுவப் பெருந்தகை, தன் தாய்மொழியாம் ‘தமிழ்’ என்னும் பெயரை நூல் மூலம் அறியச் செய்தாரில்லை.

*‘தமிழன்’ என்னும் அவரின் இனப் பெயரும் இடம்பெறவில்லை.

*தன் இயற்பெயரைப்[‘வள்ளுவர்’ என்பது ‘செய் தொழில்’ பெயர்] பிறர் அறிவதற்கான  எந்தவொரு குறிப்பையும் தந்தாரில்லை.

*‘ஆதிபகவன்’, ‘இறைவன்’, வாலறிவன்’ போன்ற சொற்களால் அனைத்திற்கும் மூலமாக உள்ளதொரு பேராற்றலைக் குறிப்பிடுகிறாரே தவிர, எந்தவொரு மதச் சார்பான பெயரையும் பயன்படுத்தவில்லை.

*மனித இன மேம்பாட்டுக்காக என்றே ஒரு நூலை இயற்றிய ‘மேன்மகன்’ வள்ளுவர்.

இப்படி, இன்னும் பல போற்றுதலுக்குரிய சிறப்புகளைப் பெற்றவர் ‘பெருந்தகை’ திருவள்ளுவர் என்பதைத் திருக்குறளை முழுமையாக வாசித்த அனைவரும் அறிவார்கள்.

கோவையில் நேற்று[18.03.2024] இடம்பெற்ற மோடியின் ஊர்வலத்தின்போது, 'பாஜக’ சங்கிக் கழிசடைகள் திருவள்ளுவருக்குக் காவித் துண்டு அணிவித்திருக்கிறார்கள்.



‘பாஜக’ சங்கிகளில் முறையாகத் திருக்குறள் கற்றவர் எவருமே இல்லையா, மேடைகளில் ஒப்பிக்க மோடிக்குக் குறள் சொல்லிக்கொடுத்த சங்கி உட்பட?

இந்தச் சங்கிக் கூட்டம், தாய்மொழிப் பற்றும் இனப் பற்றும் இல்லாமலே, தமிழின் பெருமை பற்றியும், தமிழின உணர்வு பற்றியும் பேசுகிறது தேர்தலில் வாக்குகளை அள்ளுவதற்காக.

மத வெறி பிடித்தலையும் இந்தக் கூட்டத்தை எந்தவொரு சூழலிலும் அண்டவிடக்கூடாது, ஆதரிக்கவும் கூடாது என்பதைத் தமிழர்கள் ஒருபோதும் மறத்தல் கூடாது.