எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வெள்ளி, 3 ஜனவரி, 2025

அசிங்கப்படுத்தப்படும் கண்ணகி சிலம்பு! யார் இந்தக் குஷ்பு?!?!


கண்ணகி காவிய நாயகி மட்டுமல்ல, பெண்ணினத்திற்குப் பெருமை சேர்த்த,   ஒழுக்கத்தில் சிறந்த ஒரு புரட்சிப் பெண்.

எங்கிருந்தோ வந்து இங்கே நடிகையான ஒருவர், ஒரு கட்சியின் முக்கியப் பதவி பெறும் விந்தை[அநாகரிக வார்த்தைகள் தவிர்க்கப்படுகின்றன] தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது.

கண்ணகி சிலம்பைக் கையிலேந்தி, மனம்போன போக்கில், தமிழரை ஆளும் ஒரு பாரம்பரியக் கட்சியைச் சாடும் துணிவை இவர் பெற்றது எப்படி?

யார் கொடுத்த, யாரெல்லாம் தந்த தைரியம் இது?

தமிழர்கள் மானம், ரோசம், சூடு, சொரணை எல்லாம் இழந்து வெகு காலம் ஆகிவிட்டது!