திருநீறு பூசி, அதில் பொட்டு வைத்து, பரிவட்டம் கட்டி, கிரீடமும் சூடிப் பெருமாள் சாமியைப் பயபக்தியுடன் தரிசனம் பண்ணியதால், அந்தச் சாமி 100% வெற்றி தேடித்தரும் என்பதில் சந்தேகமே இல்லை. அப்புறம் எதற்கு மக்களிடையே பரப்புரை குரைப்பு உரையெல்லாம்?
பக்கங்கள்https://kadavulinkadavul.blogspot.com/p/blog-page_1.html
- 'பசி'பரமசிவம்
- அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.
ஞாயிறு, 12 அக்டோபர், 2025
பெருமாள் அருளால் முதல்வராகும்[2026] எடப்பாடியாருக்கு நம் வாழ்த்துகள்!
நோயாளியின் மனச்சோர்வால் அதிகரிக்கும் சர்க்கரை அளவு!
சமீபத்தில் நீரிழிவு நோய் குறித்து உலகம் முழுக்க ஒரு பெரிய ஆராய்ச்சி நடத்தப்பட்டது.
நீரிழிவு நோயில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதில், முக்கியமான காரணிகளைக் கண்டறிவதற்கான சோதனையில் ஏராளமான நீரிழிவு நோயாளிகள் பங்கேற்றார்கள்.
அந்த ஆராய்ச்சியில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருப்பவர்கள், அதன் அளவு கட்டுக்குள் இல்லாதவர்கள் என்று நோயாளிகளை இரு பிரிவாக்கினார்கள்.
உலகம் முழுதும் உள்ள இரண்டு விதமான நோயாளிகளிலும், அந்த இரண்டு நிலைகளுக்கும் காரணமானவை எவை என ஆய்வு நடத்தப்பட்டது.
நீரிழிவு நோய்க்கான மருந்தைத் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்வதுதான், சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் காரணிகளில் முக்கியமானதாக இருக்கும் என்று நம்பிக்கொண்டிருந்த ஆராய்ச்சியாளர்களுக்கு, இந்த ஆராய்ச்சியின் முடிவு கடும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
நீரிழிவு நோய்க்கான மருந்தைத் தொடர்ச்சியாக எடுத்துக்கொண்ட நோயாளிகளுக்கு[மிகப் பலர்]க்கூட, சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இல்லை என்பதே அதற்கான காரணமாக இருந்தது.
தொடர்ந்து ஆராய்ந்தபோது அவர்கள் கண்டறிந்த உண்மை:
எனவே, இப்போதெல்லாம் நீரிழிவு நோய்க்கு மருந்து அளிப்பதோடு, நோயாளியின் மனச் சோர்வைப் போக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
* * * * *
