எனது படம்
பதிவுகளில் இடம்பெறும் கருத்துகளும் விமர்சனங்களும் வாசிப்பாளர்களைச் சிந்திக்கத் தூண்டுவனவாக அமைதல் வேண்டும் என்பது என் முதன்மை நோக்கம். எவரொருவரையும் திருத்துவதையோ, அவர்தம் மனங்களை நோகடிப்பதையோ நோக்கமாகக் கொண்டவை அல்ல. நான் தொடர்ந்து பதிவுகள் எழுதுவது என் நினைவாற்றலைத் தக்கவைப்பதற்காகவும், ஓய்வு நேரத்தைப் பயனுடையதாக ஆக்குவதற்காகவும் என்பதும் அறியத்தக்கது.

வெள்ளி, 5 செப்டம்பர், 2025

தொய்வில்லாமல் தொடரட்டும் தமிழுக்கான இந்த ‘வன்முறை’த் தொண்டு!

பெங்களூருவில் வாழ்பவர்களுக்குத் தெரியும், கன்னடத்தில் எழுதப்படாத கடைகளுக்கான பெயர்ப் பலகையே அங்கு இல்லை என்பது. இது கன்னடர்களின் மொழிப் பற்றுக்கான அழியாததும் அழுத்தமானதுமான அடையாளம்.

தமிழினப் பற்றுள்ளவர்கள் ஆட்சிபுரியும் தமிழ்நாட்டின் தலைநகரிலோ, பிற நகரங்களிலோ நிலைமை தலைகீழானது. தமிழ் இடம்பெறாத பெயர்ப் பலகைகள் ஆயிரக்கணக்கில்.

தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு உறைக்கும் வகையில், புதுச்சேரித் தமிழர்கள் தமிழ் இடம்பெறாத கடைகளின் பெயர்ப் பலகைகளை அடித்து நொறுக்கியிருப்பது  நம்மைப் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இது தற்காலிகமானதும் அளவில் மிகக் குறைவானதுமான மகிழ்ச்சிதான்.

புதுச்சேரித் தமிழர்கள் ஆற்றிய இந்த அதிரடித் தமிழ்ப்பணி தமிழ்நாடெங்கிலும் தொடருதல் வேண்டும் என்பது நம் ஆசை; அல்ல அல்ல, பேராசை.

புதுச்சேரித் தமிழர்களுக்கு நம் நெஞ்சார்ந்த பாராட்டுகள்.