எனது படம்
பதிவுகளில் இடம்பெறும் கருத்துகளும் விமர்சனங்களும் வாசிப்பாளர்களைச் சிந்திக்கத் தூண்டுவனவாக அமைதல் வேண்டும் என்பது என் முதன்மை நோக்கம். எவரொருவரையும் திருத்துவதையோ, அவர்தம் மனங்களை நோகடிப்பதையோ நோக்கமாகக் கொண்டவை அல்ல. நான் தொடர்ந்து பதிவுகள் எழுதுவது என் நினைவாற்றலைத் தக்கவைப்பதற்காகவும், ஓய்வு நேரத்தைப் பயனுடையதாக ஆக்குவதற்காகவும் என்பதும் அறியத்தக்கது.

ஞாயிறு, 18 டிசம்பர், 2022

வாருங்கள்... வாய்விட்டுச் சிரிக்கலாம்!!!

கீழ்க்காண்பவை quora.com இல் வெளியான கேள்வியும் பதிலும்.

கேள்வி:

ஜட்டியில் உள்ள எலாஸ்டிக் பட்டை அடி வயிற்றில் இறுக்குவதால், மூச்சு விடச் சிரமமாக உள்ளது. இதற்குத் தீர்வே இல்லையா?


பதில்: 

முத்து காமாட்சி[Computer Science and Engineering படித்தவர்; 2012ஆம் ஆண்டு பட்டம் பெற்றார்]:

அந்தக் கருமத்த எதுக்குப் போடுறீங்க? சும்மா free ya விட்டுட வேண்டியதுதானே.


ஆனா என்ன..... வீட்டுல அக்கா, தங்கச்சிங்க இருக்கும்போது கொஞ்சம் சூதானமா இருந்துக்கணும். அதோடு.....


பாக்கக் கூடாததைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டிங்கனா பொழப்பு சந்தி சிரிச்சிடும்!

* * * * *

சற்று முன்னர் இந்தக் கேள்வி-பதிலைப் படித்ததிலிருந்து சிரிப்பைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.


நீண்ட நேரம் சிரித்தேன்; வாய்விட்டுச் சிரித்தேன்.


நம்புங்கள், சிரித்துக்கொண்டேதான் இந்தப் பதிவை எழுதி முடித்தேன்.


இப்போதும் சிரித்தபடிதான் உள்ளேன்.


நீங்களும் சிரிக்கிறீர்கள்தானே?


இப்போது மட்டுமல்ல, ‘முத்து காமாட்சி’யின், சற்றேனும் ஆபாசம் கலவாத எதார்த்தமான இந்தப் பதில் நினைவுக்கு வரும்போதெல்லாம் சிரிப்பீர்கள் அல்லவா?


ஹ...ஹ...ஹ!!!

===============================================================================