எனது படம்
இந்தத் தளத்தின் பதிவுகளில் இடம்பெறும் கருத்துகளும் விமர்சனங்களும் வாசிப்பாளர்களைத் திருத்துவதையோ, அவர்தம் மனங்களை நோகடிப்பதையோ நோக்கமாகக் கொண்டவை அல்ல. இவை அவர்களைச் சிந்திக்கத் தூண்டுவனவாக அமைதல் வேண்டும் என்பது என் விருப்பம். நான் பதிவுகள் எழுதுவது என் நினைவாற்றலைத் தக்கவைப்பதற்காகவும், ஓய்வு நேரத்தைப் பயனுடையதாக ஆக்குவதற்காகவும் என்பதும் அறியத்தக்கது.

செவ்வாய், 15 ஜூலை, 2025

ஓடிமுடித்ததும் பரிசு உண்டு! ஒருங்கிணைந்து ஓடலாம் வாரீர்!!

சில நிமிடங்களில் முடியும் பந்தயம் அல்ல இது; மணிக்கணக்கில் ஓடும் மாரத்தானும் அல்ல.

தொடங்குவது தெரியும்; எப்போது முடியும் என்று ஓடுகிற எவருக்கும் தெரியாது.

ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க அவர் அவதாரமாயினும் மகானாயினும் வேறு யாராயினும் அனுமதி இல்லை.

ஓடிக்கொண்டே வேடிக்கை பார்க்கலாம்; வேடிக்கை பார்த்துக்கொண்டே ஓடலாம்.

ஓடிமுடித்த ஒவ்வொருவருக்கும் பரிசு உண்டு.

பரிசின் பெயர்.....

‘மரணம்’!

‘காலதேவன்’[யமன்] மேற்பார்வையில் காலங்காலமாய் நடைபெறும் போட்டி இது.

நடத்துபவர்.....

நம் கருணை வடிவான கடவுள்!