செவ்வாய், 15 ஜூலை, 2025

ஓடிமுடித்ததும் பரிசு உண்டு! ஒருங்கிணைந்து ஓடலாம் வாரீர்!!

சில நிமிடங்களில் முடியும் பந்தயம் அல்ல இது; மணிக்கணக்கில் ஓடும் மாரத்தானும் அல்ல.

தொடங்குவது தெரியும்; எப்போது முடியும் என்று ஓடுகிற எவருக்கும் தெரியாது.

ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க அவர் அவதாரமாயினும் மகானாயினும் வேறு யாராயினும் அனுமதி இல்லை.

ஓடிக்கொண்டே வேடிக்கை பார்க்கலாம்; வேடிக்கை பார்த்துக்கொண்டே ஓடலாம்.

ஓடிமுடித்த ஒவ்வொருவருக்கும் பரிசு உண்டு.

பரிசின் பெயர்.....

‘மரணம்’!

‘காலதேவன்’[யமன்] மேற்பார்வையில் காலங்காலமாய் நடைபெறும் போட்டி இது.

நடத்துபவர்.....

நம் கருணை வடிவான கடவுள்!