சில நிமிடங்களில் முடியும் பந்தயம் அல்ல இது; மணிக்கணக்கில் ஓடும் மாரத்தானும் அல்ல.
தொடங்குவது தெரியும்; எப்போது முடியும் என்று ஓடுகிற எவருக்கும் தெரியாது.
ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க அவர் அவதாரமாயினும் மகானாயினும் வேறு யாராயினும் அனுமதி இல்லை.
ஓடிக்கொண்டே வேடிக்கை பார்க்கலாம்; வேடிக்கை பார்த்துக்கொண்டே ஓடலாம்.
ஓடிமுடித்த ஒவ்வொருவருக்கும் பரிசு உண்டு.
பரிசின் பெயர்.....
‘மரணம்’!
‘காலதேவன்’[யமன்] மேற்பார்வையில் காலங்காலமாய் நடைபெறும் போட்டி இது.
நடத்துபவர்.....
நம் கருணை வடிவான கடவுள்!