எனது படம்
இந்தத் தளத்தின் பதிவுகளில் இடம்பெறும் கருத்துகளும் விமர்சனங்களும் வாசிப்பாளர்களைத் திருத்துவதையோ, அவர்தம் மனங்களை நோகடிப்பதையோ நோக்கமாகக் கொண்டவை அல்ல. இவை அவர்களைச் சிந்திக்கத் தூண்டுவனவாக அமைதல் வேண்டும் என்பது என் விருப்பம். நான் பதிவுகள் எழுதுவது என் நினைவாற்றலைத் தக்கவைப்பதற்காகவும், ஓய்வு நேரத்தைப் பயனுடையதாக ஆக்குவதற்காகவும் என்பதும் அறியத்தக்கது.

செவ்வாய், 24 ஜூன், 2025

செத்த மொழிக்குக் கோடிகளில் சமாதி கட்டுகிறாரா கில்லாடி மோடி!?!?!

கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருதத்தை மேம்படுத்த ரூ.2,533 கோடி மத்திய அரசு செலவிட்டிருப்பது ஆர்டிஐ மூலமாக அம்பலமாகி இருக்கிறது. ஆனால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஒடியா உள்ளிட்ட செம்மொழிகளுக்கு ஆண்டுக்கு வெறும் ரூ.13 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது[https://tamil.oneindia.com].

சமஸ்கிருதம் செத்தொழிந்து நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன[கோயில்களில் வேதம் ஓதி, ‘அவர்கள்’ பிழைப்பு நடத்த மட்டுமே பயன்படுகிறது].

10 ஆண்டுகளில் அதற்கு ரூ2533// கோடி செலவு செய்தும்[மோடி ஆட்சியில்] அது செத்த சவமாகத்தான் இருக்கிறது.

சவம் சவம்தான். அதற்குச் செய்த/செய்யும் செலவெல்லாம் வீண் விரயம்தான் என்பது தெரிந்திருந்தும் ரூ2533 கோடியை வீணடித்தது ஏன்?

வீணடிக்கப்பட்டதா அல்லது விவரமானவர்களின் சேமிப்புக் கணக்கில் சேர்க்கப்பட்டதா?

சேர்த்த அந்தப் பிழைக்கத் தெரிந்த புத்திசாலி யார்?

புத்திசாலியா, புத்தி சாலிகளா?

அவர் யார் அல்லது, அவர்கள் யாவர் என்பது இந்த நாட்டின் பிதாமகன் மோடிக்குத் தெரிந்திருக்குமா?

                                   *   *   *   *   *

https://tamil.oneindia.com/news/chennai/union-government-spent-rs-2-533-crore-on-sanskrit-in-10-years-classical-languages-get-only-rs-13-cr-715029.html