எனது படம்
தமிழர்கள் தமிழ்ப் பற்றாளர்களாக இருந்தால் மட்டும் போதாது; இந்தி ஆதிக்கத்தைத் தகர்க்க, தமிழ் வெறியர்களாக ஆவது[பிற மொழியாளரும்தான்] மிக அவசியம். இந்தி வெறியர்களின் கொட்டத்தை அடக்கக் கடுமையான போராட்டங்கள் தேவைப்படலாம்.

ஞாயிறு, 28 டிசம்பர், 2025

‘மக்களவையில் மொழியாக்கம்[22 மொழிகள்]’... இது பிள்ளையார் சுழி மட்டுமே!

 ஒன்றிய அரசின் மேற்கண்ட இந்த நடவடிக்கை மெச்சத்தக்கது என்றாலும், வெறித்தனமான இந்தித் திணிப்பால் இந்த நாடு உடைந்து நொறுங்கிச் சிதறாமலிருக்க, இன்னும் மேம்பட்ட விரைவான நடவடிக்கைகள் தேவை.

அவற்றில் குறிப்பிடத்தக்கவை.....

அஞ்சலகம், ரயிவ்வே, நடுவணரசின் வங்கிகள், காப்பீடு போன்றவற்றில் ஆங்கிலத்தைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை ஆக்கிரமித்திருக்கிற அத்தனை இந்தி வாசகங்களும் அழிக்கப்பட்டு, அங்கெல்லாம் அந்தந்த மாநில மொழி வாசகங்கள் இடம்பெறுதல் வேண்டும்[இந்தி பேசப்படும் மாநிலங்களில் ஆங்கிலத்துடன் இந்தியும் இடம்பெறலாம்].

இது நிகழ்ந்தால்தான், இந்தியா இந்தி வெறியன்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல; வேறு வேறான பல மொழிகள் பேசுகிற மாநில மக்களுக்கும் உரிமையானது என்பது உறுதிப்படுத்தப்படும்.

இந்திய ஒன்றியம் என்பது பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் வட்டாரங்களின் ஒரு தனித்துவமான கலவையாகும். இவை அனைத்தும் ஒரே அரசியலமைப்புச் சட்டக் கட்டமைப்புக்குள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன[‘The Indian Union is a unique amalgamation of diverse cultures, languages, and regions, all unified under a single constitutional framework’] என்பதை  ஒட்டுமொத்த உலகமும் அறிந்துகொள்ளும்.

சனி, 27 டிசம்பர், 2025

மெகபூபா முஃப்தி வாழ்க! ஸ்டாலின் நீடூழி வாழ்க!!

மக்கள் ஜனநாயகக் கட்சியின்(பிடிபி) தலைவர் மெகபூபா முஃப்தி, வெள்ளிக்கிழமை கட்சியின் தலைமையகத்தில் காஷ்மீரி மொழியில் தனது செய்தியாளர் சந்திப்பைத் தொடங்கிய உடனேயே, ஒரு பத்திரிகையாளர் அவரை உருது மொழியில் பேசுமாறு கேட்டார்.

முன்னாள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான அவர், ஊடகங்கள் ஏன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை ஆங்கிலத்திலோ அல்லது உருதுவிலோ பேசுமாறு கேட்பதில்லை என்று கேள்வி எழுப்பி, அந்தப் பத்திரிகையாளரைக் கடுமையாகச் சாடினார்.

ஊடகக்காரனைச் சாடியது மட்டுமல்லாமல், தய்மொழிப் பற்றுக்கு முதல்வர் ஸ்டாலினை முன்னுதாரணமாக அவர் காட்டியிருப்பது தமிழர்களைப் பெருமிதப்படச் செய்திருக்கிறது.

இந்தியாவில் பாதிக்கும் மிகக் குறைவாகப் பேசப்படும் இந்தியைக் கொண்டாடும் இந்தி வெறியர்களுக்கு, மெகபூபா முஃப்தியின் செயல்பாடு புத்தி புகட்டுவதாக அமைந்துள்ளது.

இந்தி அல்லாத பிற மொழிக்காரர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதாகவும் இது அமைகிறது.

“இப்போது இது ஒன்றுதான் மிச்சம் இருக்கிறது[அத்தனை உரிமைகளையும் ‘பாஜக’ அரசு பறித்துவிட்டது என்கிறார்?], எனவே, காஷ்மீரி மொழிக்குச் சிறிது மரியாதை கொடுங்கள்” என்று ஊடகக்காரர்களிடம் கூறியதோடு,  காஷ்மீரி மொழியிலேயே தொடர்ந்து பேசினார் மெகபூபா முஃப்தி.*

                                           *   *   *   *   *

https://kashmirobserver.net/2025/12/26/mehbooba-speaks-kashmiri-cites-tamil-leaders-in-language-row/