கேள்வி கேட்டவனாகட்டும் பதில் சொன்னவனாகட்டும், தமிழர்களை இழிவுபடுத்தியும், ஆதிக்க வெறி கொண்ட வடக்கன்களின் கால் கழுவிய நீர் குடித்தும் பிழைப்பு நடத்தும் அடிமைகள் ஆவார்கள்.
ஆங்கிலமும் இந்தியும் தெரியாததால் ஸ்டாலின் தேசியத் தலைவர் ஆக இயலாது என்கிறான் கழிசடைக் காலைக்கதிர்க்காரன்[‘கேள்வி-பதில்’ பகுதி].
மறைந்த காமராசர் என்னும் தமிழ் மட்டுமே தெரிந்த பெருந்தலைவர், இந்த இந்தியாவின் பிரதமரைத் தேர்வு செய்வதில் முக்கியப் பங்கு வகித்தது இந்த அண்டிப் பிழைக்கும் அறிவீனனுக்குத் தெரியும்.
எப்போது எங்குச் சென்றாலும் மொழிபெயர்ப்பாளரை உடன் அழைத்துச் செல்லும் மோடிக்கு, அரைகுறை இந்தி மட்டுமே தெரியும் என்பதும் இந்த அரைவேக்காடனுக்குத் தெரியும்.
எந்தவொரு மொழியில் பேசினாலும், உடனுக்குடன் விரும்பும் மொழியில் ‘மொழியாக்கம்’ செய்வதற்கான கருவிகள் பயன்பாட்டில் இருப்பதும் இந்தக் குதர்க்கவாதிக்குத் தெரியும்.
தெரிந்திருந்தும், தன் சங்கி எஜமானன்களைத் திருப்திப்படுத்திட ஸ்டாலினை இழிவுபடுத்தியிருக்கிறான் இந்தக் காரியவாதி.
தமிழர்கள் விழிப்புணர்வு பெற்று, காசு கொடுத்துக் காலைக்கதிர் வாங்குவதை நிறுத்தினாலே இவன் பெட்டிப் பாம்பாய் அடங்கிவிடுவான்.
இது விசயத்தில் நம்மவர்கள் காலதாமதம் செய்தல் கூடாது என்பது நம் எச்சரிக்கை.
