எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

ஞாயிறு, 28 டிசம்பர், 2025

‘மக்களவையில் மொழியாக்கம்[22 மொழிகள்]’... இது பிள்ளையார் சுழி மட்டுமே!

 ஒன்றிய அரசின் மேற்கண்ட இந்த நடவடிக்கை மெச்சத்தக்கது என்றாலும், வெறித்தனமான இந்தித் திணிப்பால் இந்த நாடு உடைந்து நொறுங்கிச் சிதறாமலிருக்க, இன்னும் மேம்பட்ட விரைவான நடவடிக்கைகள் தேவை.

அவற்றில் குறிப்பிடத்தக்கவை.....

அஞ்சலகம், ரயிவ்வே, நடுவணரசின் வங்கிகள், காப்பீடு போன்றவற்றில் ஆங்கிலத்தைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை ஆக்கிரமித்திருக்கிற அத்தனை இந்தி வாசகங்களும் அழிக்கப்பட்டு, அங்கெல்லாம் அந்தந்த மாநில மொழி வாசகங்கள் இடம்பெறுதல் வேண்டும்[இந்தி பேசப்படும் மாநிலங்களில் ஆங்கிலத்துடன் இந்தியும் இடம்பெறலாம்].

இது நிகழ்ந்தால்தான், இந்தியா இந்தி வெறியன்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல; வேறு வேறான பல மொழிகள் பேசுகிற மாநில மக்களுக்கும் உரிமையானது என்பது உறுதிப்படுத்தப்படும்.

இந்திய ஒன்றியம் என்பது பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் வட்டாரங்களின் ஒரு தனித்துவமான கலவையாகும். இவை அனைத்தும் ஒரே அரசியலமைப்புச் சட்டக் கட்டமைப்புக்குள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன[‘The Indian Union is a unique amalgamation of diverse cultures, languages, and regions, all unified under a single constitutional framework’] என்பதை  ஒட்டுமொத்த உலகமும் அறிந்துகொள்ளும்.