சனி, 20 ஜூன், 2015

தமிழ் வளர்க்கும் தமிழ்மணத்திற்கு ஓர் அன்பான வேண்டுகோள்!

சற்று முன்னர்[20.06.2015], தமிழ்மணத்தில் நான் இணைத்த பதிவின் தலைப்பு, ‘பொல்லாத விதியும் ஒரு கவர்ச்சி நடிகையின் உள்ளாடையும்!!!’http://kadavulinkadavul.blogspot.com/2015/06/blog-post_20.html என்பது. இப்படித் தலைப்பிட்டதற்கான காரணத்தையும் பதிவின் இறுதியில் குறிப்பிட்டிருக்கிறேன். [பல நாட்கள் ஆழ்ந்து சிந்தித்ததன் விளைவு இப்பதிவு; கிஞ்சித்தும் ஆபாசமற்றது]
இதனை இணைத்துக்கொண்டதற்கான அறிவிப்பைத் தமிழ்மணம் வெளியிட்டது. ஆனால், முகப்புப் பக்கத்திலான பதிவுகளின் பட்டியலில் இது இடம்பெறவில்லை.

பதிவின் தலைப்போ அதன் உள்ளடக்கமோ தரமற்றது அல்லது ஆபாசமானது என்று தமிழ்மணம் கருதினால், அப்பதிவுக்கான இணைப்பை நிராகரித்துவிடலாம். அதை விடுத்து, பதிவை இணைத்துக்கொண்டதற்கான அறிவிப்பை வெளியிட்டுவிட்டுப் பட்டியலில் சேர்க்காமலிப்பது ஏன் என்று புரியவில்லை. என்னுடைய கணிசமான பதிவுகள் இவ்வாறு புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.

முகப்புப் பக்கம் தவிர்க்கப்பட்டுச் சில மணி நேரங்கள் கழித்துப் பின்வரும் பக்கங்களில் அது தெரிய வருவதில் பெரிதாகப் பயன் ஏதும் விளைவதில்லை.

ஏன் இந்தப் புரியாத நடவடிக்கை?

நேரம் ஒதுக்கி, இது குறித்து விளக்கம் அளிப்பார்களா தமிழ்மணம் நிர்வாகிகள்?
=============================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக