‘நாளென ஒன்றுபோல் காட்டி உயிரீரும் வாளது உணர்வார்ப் பெறின்’
//நாள் என்பது ஓர் ‘அளவுகோல்’தான் எனினும், அது[வாழும் ஆயுட்கால அளவைக் குறைப்பதால்] நம் உயிரைப் பறிக்கும் வாள் ஆகும்// என்பது மேற்கண்ட திருக்குறளுக்கான சுருக்கமான விளக்கம்.
ஆகவே, ஒரு நாள் என்பது நம்மால் வெறுக்கத்தக்கது ஆகும்.
ஆண்டின் தொடக்கம்[புத்தாண்டு] என்பதும் இதைப் போன்றதுதான். அதாவது, இது நம் வாழ்நாளில் ஓர் ஆண்டைக் குறைக்கிறது; பறிக்கிறது என்றும் சொல்லலாம்.
உண்மை இதுவாக இருக்க, ‘புத்தாண்டு வாழ்த்து’த் தெரிவிப்பதை மக்கள் வழக்கமாக்கியுள்ளார்களே, இது ‘அறிவுடைமை’ ஆகுமா?
