எனது படம்
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், நம் கட்சித் தலைவர்கள் மனம்போன போக்கில், நிறைவேற்றுவதற்கான சாத்தியமே இல்லாத வாக்குறுதிகளையெல்லாம் அள்ளி இறைக்கிறார்கள்; நிறையப் பொய் சொல்லுகிறார்கள்; எதிரணியினரை வரம்பில்லாமல் வசைபாடுகிறார்கள். இவற்றால் எல்லாம் மக்களுக்குப் பயன் இல்லை என்பதோடு மக்களின் நேரத்தை இவை வீணடிக்கின்றன என்பதால், தேர்தல் முடிவுகள் வெளியாகும்வரை இவர்களின் பரப்புரைகள் ஊடகங்களில் வெளியாவதைத் தடை செய்வது நல்லதொரு முன்னுதாரணமாக அமையும்.

வியாழன், 1 ஜனவரி, 2026

பொல்லாத புத்தாண்டு வருத்தங்கள்![தத்துவப் பகிர்வு!! ஹி... ஹி... ஹி!!!]

‘நாளென ஒன்றுபோல் காட்டி உயிரீரும்                                                                   வாளது உணர்வார்ப் பெறின்’  

//நாள் என்பது ஓர் ‘அளவுகோல்’தான் எனினும், அது[வாழும் ஆயுட்கால அளவைக் குறைப்பதால்] நம் உயிரைப் பறிக்கும் வாள் ஆகும்// என்பது மேற்கண்ட திருக்குறளுக்கான சுருக்கமான விளக்கம்.

ஆகவே, ஒரு நாள் என்பது நம்மால் வெறுக்கத்தக்கது ஆகும்.

ஆண்டின் தொடக்கம்[புத்தாண்டு] என்பதும் இதைப் போன்றதுதான். அதாவது, இது நம் வாழ்நாளில் ஓர் ஆண்டைக் குறைக்கிறது; பறிக்கிறது என்றும் சொல்லலாம்.

உண்மை இதுவாக இருக்க, ‘புத்தாண்டு வாழ்த்து’த் தெரிவிப்பதை மக்கள் வழக்கமாக்கியுள்ளார்களே, இது ‘அறிவுடைமை’ ஆகுமா?