எனது படம்
எந்தவொரு கட்சி சார்பாகவும் தேர்தலில் போட்டியிடுகிறவனின் தனிப்பட்ட குறை நிறைகளைப் பொருட்படுத்தாமல், இந்நாளில் அவன் சார்ந்திருக்கும் கட்சியின் கொள்கைகளுக்காவே வாக்குரிமை பெற்ற நம் மக்கள் அவனைத் தேர்ந்தெடுக்கிறார்கள். கட்சித் தலைமைக்குக் கட்டுப்படாமல், ஆதாயம் கருதிப் பிறிதொரு கட்சிக்கு[குறிப்பாக ஆளுங்கட்சி] ஆதரவாகச் செயல்பட்டால், தன் கட்சிக்கு மட்டுமல்லாமல், வாக்களித்த மக்களுக்கும் துரோகம் செய்தவன் ஆகிறான் அவன். அந்த அயோக்கியன் தாலி கட்டிய தன் பெண்டாட்டிக்குக்கூடத் துரோகம் செய்யத் தயங்கமாட்டான்!

வியாழன், 1 ஜனவரி, 2026

பொல்லாத புத்தாண்டு வருத்தங்கள்![தத்துவப் பகிர்வு!! ஹி... ஹி... ஹி!!!]

‘நாளென ஒன்றுபோல் காட்டி உயிரீரும்                                                                   வாளது உணர்வார்ப் பெறின்’  

//நாள் என்பது ஓர் ‘அளவுகோல்’தான் எனினும், அது[வாழும் ஆயுட்கால அளவைக் குறைப்பதால்] நம் உயிரைப் பறிக்கும் வாள் ஆகும்// என்பது மேற்கண்ட திருக்குறளுக்கான சுருக்கமான விளக்கம்.

ஆகவே, ஒரு நாள் என்பது நம்மால் வெறுக்கத்தக்கது ஆகும்.

ஆண்டின் தொடக்கம்[புத்தாண்டு] என்பதும் இதைப் போன்றதுதான். அதாவது, இது நம் வாழ்நாளில் ஓர் ஆண்டைக் குறைக்கிறது; பறிக்கிறது என்றும் சொல்லலாம்.

உண்மை இதுவாக இருக்க, ‘புத்தாண்டு வாழ்த்து’த் தெரிவிப்பதை மக்கள் வழக்கமாக்கியுள்ளார்களே, இது ‘அறிவுடைமை’ ஆகுமா?