பக்கங்கள்

செவ்வாய், 27 பிப்ரவரி, 2024

இரவு பகலாய் ஆயுதப் படைப் பாதுகாப்பு! சாமி தரிசனம் எதற்கு?

//பிரதமர் மோடி திருவனந்தபுரத்திலிருந்து விமானம் மூலம் இன்று மதியம் 2.05 மணிக்கு, கோவை மாவட்டம் சூலூர் விமானப் படைத் தளத்திற்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாதப்பூருக்கு[பல்லடம்]ச் செல்லும் மோடி  பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.

மாலை 5 மணிக்குப் புறப்பட்டு மதுரை செல்கிறார். 

7 மணிக்குத் தனியார் விடுதி ஒன்றில் தங்கும் அவர், இரவு 9.10 மணி அளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் பள்ளியறைப் பூஜை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்கிறார்//


இது இன்று ஊடகங்கள் பலவற்றிலும் வெளியாகியுள்ள செய்தி.


ஒரு பிரதமராக, நாடெங்கும் நாட்கணக்கில் பயணம் செய்வதும், நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதும் வழக்கமானதே என்பதால், காவலர் பாதுகாப்புக் குறித்துக் கருத்துச் சொல்வது தேவையற்றது.


ஆனால், ‘மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வருவதால், இன்று மாலை 4.30 மணியிலிருந்து நாளைவரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கும், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வீதிகளில் கடைகளைத் திறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது[இவர் அம்மனின் செல்லப்பிள்ளை?!].


கோயில் கோபுரங்களில் ஏறி நின்று, தூக்கிப் பிடித்த துப்பாக்கிகளுடன் படை வீரர்கள் காவல் காக்கிறார்கள் என்பதோடு, மோப்ப நாய்களுடன் பலத்த பாதுகாப்பும் செய்யப்பட்டுள்ளது’ என்னும் இந்தக் கூடுதல் செய்திதான் நம் அடிமனதை உறுத்துகிறது.


தலைமைப் பொறுப்பிலுள்ள இவருக்கும் இவரைப் போன்றவர்களுக்கும் நாள் முழுக்க இம்மாதிரி ஆயுதப் படையின் பாதுகாப்பு தேவைதான், இவர்கள் முழுக்க முழுக்க கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாக இருந்தால்.


மோடி மிக மிக மிக மேலான அதிதீவிரக் கடவுள் பக்தர்.


கோயில் கோயிலாகச் சென்று குனிந்து குனிந்து கும்பிடுவதையும், நெடுஞ்சாண்கிடையாகத் தரையில் கவிழ்ந்து சாமி தரிசனம் செய்பவதையும் வழக்கமாக்கியவர்.


இவர் வழிபடும் கடவுள்கள் இவரையும் இவரைப் போன்ற உயர் மட்டத் தலைவர்களையும், காலமெல்லாம் கண்ணுங்கருத்துமாய்ப் பாதுகாப்பது அவசியம்.


அந்தக் கடவுள்கள் இதைச் செய்வதில்லை என்பதால்தான் இவர்களுக்குக் காவல் படைகளின் கட்டுக்காவல் தேவைப்படுகிறதா?


“ஆம்” என்றால்.....


நம் கேள்வி:


இவர்கள் கடவுள்களைத் தொழுவது மரணத்திற்குப் பிறகு சொர்க்கத்தில் இடம் பெறுவதற்கு மட்டும்தானா?


மோடியையும் இன்ன பிற பக்தியுள்ளம் கொண்ட பிரபலங்களையும் நக்கலடிப்பது நம் நோக்கமல்ல. நம் உள்மனதிலிருந்து எழுந்த 100% உண்மையான கேள்வி இது.