எனது படம்
மனிதன் விசித்திரமானவன்; விரும்பியது கிடைக்காவிட்டால் விதியை நொந்துகொள்கிறான்; தடங்கல் ஏதுமின்றி கிடைத்துக்கொண்டிருந்தாலோ, “இன்னும் வேண்டும்... இன்னும் வேண்டும்” என்று பித்துப்பிடித்து அலைகிறான். ஆசை ஐயா ஆசை... பேராசை! தடை எதுவும் இல்லாவிட்டாலோ அது அடங்கவே அடங்காது!

வெள்ளி, 9 ஜனவரி, 2026

'அதிமுக' அல்லாத, ஆளுங்கட்சியை ஆதரிக்காத உதிரிக் கட்சிகளுக்குக் கடும் எச்சரிக்கை!!!

இந்தியா பல்வேறு இனத்தவருக்கும் உரிமையானது என்றாலும், ஒவ்வொரு இந்திக்காரனும் இந்தியாவை இந்திக்காரனே ஆள வேண்டும்[குறிப்பாக, ‘பாஜக’ ஆட்சியில்] என்று நினைக்கிறான். 

இந்தியைப் பரப்புவதற்கு இந்திய மக்களின் வரிப்பணத்தில் மிகப் பெரும் தொகையை ஆளும் பாஜக செல்விடுவது, இந்திக்காரன்களின் ஆதரவைத் தக்கவைத்து, ஆட்சி[ஒன்றியம்]யில் நீடிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைக் கைப்பற்றினால், இந்தியை எதிர்க்கும் இனத்தவரை மிக எளிதாக அடக்கி முடக்கிவிட முடியும் என்பது ‘இரட்டைத் தலைமை’ போடும் கணக்கு.

ஆட்சியில் இருந்தபோதும், இல்லாத இன்றைய நிலையிலும் உரிய சன்மானம் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு உடந்தையாக இருந்து சேவகம் செய்பவர் ‘அதிமுக’ பழனிசாமி[எடப்பாடியார்> அவ்வப்போது அவர்களைப் புறக்கணிப்பது போல் பேசுவதும் நடந்துகொள்வதும் வெறும் பாசாங்கு].

எடப்பாடி ‘ருசி’ கண்ட அடிமை. இந்த அடிமையை ஆண்டவானாலும்[இருந்தால்] திருத்த இயலாது.

இந்தத் தந்திரக்கார நரியின் ஒத்துழைப்புடன், சங்கித் தலைவர்கள்[நம்பர் 1 & நம்பர் 2]  ‘தமிழ் ஆதரவாளர்’களாகத் தங்களைக் காட்டிக்கொள்வதெல்லாம் ‘வெளி வேடம்’ என்பது தமிழர்களுக்கு அத்துபடியாய்த் தெரியும் என்பதால்.....

சங்கிகளின் கட்சி[+கூட்டணி] இங்கு வேரூன்றுவதோ, ஆட்சியைக் கைப்பற்றுவதோ ஒருபோதும்  நடைபெறாது.

மீண்டும் முதல்வராகும் எடப்பாடியின் கனவும் பலிக்காது.

ஆகவேதான், ‘அதிமுக’வுடனும் ‘பாஜக’வுடனும் கூட்டணி அமைத்துப் பலன் பெறலாம் என்று கனவுகூடக் காண வேண்டாம் என்று அமமுக, தேமுதிக, பாமக[இரு அணிகள்] ஆகிய கட்சிகளின் தலைவர்களையும், வெற்றிக் கட்சித் தலைவர், ஓபிஎஸ், சீமான், சசி அம்மா ஆகியோரையும் வேண்டிக்கொள்கிறோம்.

பரிந்துரை> எச்சரிக்கையும்கூட:

பெருமதிப்பிற்குரியீர், வடக்கன்களுக்கு அடிமை ஆகாமல், தமிழருக்காகக் கட்சி நடத்துங்கள்.

நடத்தினால்.....

2026 தேர்தலில் அதிக அளவில் வெற்றி வாய்ப்பைப் பெறாவிட்டாலும், மக்களிடம் இப்போது உள்ள ஆதரவையேனும் தக்கவைக்கலாம்.

ஆகவே, எப்போதும் தமிழர்களாகவே இருங்கள்; தமிழர்களுக்காகவே கட்சி நடத்துங்கள்; அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கத்துடனேயே தேர்தலில் போட்டியிடுங்கள்.

எதிர்பார்க்கும் பலன் கிட்டுகிறதோ அல்லவோ, தமிழினம் உங்களை வாழ்த்தும்; நன்றி செலுத்தும்; என்றென்றும் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கும்.