சனி, 6 அக்டோபர், 2012

குமுதம் ‘ச்சீய்..!’ கதைகளுக்குப் போட்டியாய் ஒரு ‘ச்சீய்...ச்சீய்’க் கதை!

குமுதம், தன் ’நம்பர்1’ இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளவே இந்தச் ‘ச்சீய்..!’ கதைகள்.

குணாளன்!

பெயருக்கேற்ப, நல்ல குணங்கள் உள்ள இருபத்தைந்து வயது வாலிபன்.

தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவன். பொழுது போகாத நேரங்களில், ’காந்தி’யின் ‘பிரமச்சரியம்’, திரு.வி.க.வின் ‘பெண்ணின் பெருமை’ போன்ற மன மாசுகளைப் போக்கும் நல்ல புத்தகங்கள் படிப்பான்.

வாரப் பத்திரிகைகளும் படிப்பதுண்டு.

’குமுதம்’ படிக்கும்போது, சினிமாச் செய்திகள், கவர்ச்சிப் படங்கள், விரசம் கலந்த ‘அரசு பதில்கள்’, ஒற்றக் கூத்தனின் ‘ஆட்டமா, தேரோட்டமா?’ போன்ற மனதைக் கெடுக்கும் ’குப்பை கூளங்களை’க் கிழித்தெடுத்துவிட்டு, மிச்சமிருப்பதைப் பின் அடித்துக் கொண்டு படிப்பான்.

இப்படிப்பட்ட குணாளனின் கண்களில், குமுதத்தில் ‘கோலப்பன்’ எழுதிவரும் ‘ச்சீய்..!’ கதை கண்ணில் பட்டது.

தலைப்பே ‘ச்சீய்...’ன்னா, உள்ள இருக்கிற மேட்டரும் ’நாத்தம்’ புடிச்சதாத்தான் இருக்கும்கிற முடிவோட,  முகம் பார்க்கும் கண்ணாடி தேடினான்.

வீடு முழுக்கச் சல்லடை போட்டும் அது கிடைக்கவில்லை. [வீட்டில் நிலைக்கண்ணாடியும் இல்லை].

பொறுமை இழந்து, “பாட்டி, முகம் பார்க்குற கண்ணாடி எங்கே?”ன்னு கேட்டான். குழந்தைப் பருவத்திலிருந்தே அவன், தாத்தா பாட்டி வீட்டில் வளர்பவன். பாட்டிக்கு வயது 70. தாத்தாவுக்கு 80]

”பக்கத்து வீட்டுக் காலேஜ் கொமுரி வாங்கிட்டுப் போனா. இன்னும் திருப்பித் தரல” என்று பொய் சொன்னாள் பாட்டி!

கதையைத் தலைகீழாப் போடுறது; பத்து வரிக் கதையை ரெண்டு வரியா துக்கிளியூண்டு எழுத்தில் அச்சிட்டு மண்டை காய வைக்கிறது; வரிகளை வட்ட வட்டமாச் சுழிச்சி முகம் சுழிக்க வைக்கிறது. இப்படி, விதம் விதமான உத்திகளைக் கையாண்டு, இதழ் விற்பனையைக் கூட்டுறது குமுதத்துக்குக் கைவந்த கலை என்பது நினைவுக்கு வரவே, நண்பன் விவேக்கைப் பார்க்கக் கிளம்பினான் குணாளன்.

கண்ணாடியில் ‘ச்சீய்...’படித்துக்கொண்டிருந்த விவேக், இவனுக்காகச் சத்தம் போட்டுப் படித்தான்.

கேட்டதும் குமுறும் எரிமலையானான் குணாளன்.

”எத்தனை நல்ல உள்ளங்களைக் கெடுக்குது இந்தச் ‘ச்சீய்..!’. இப்படி ஆபாசக் கதை போட்டு அட்டூழியம் பண்றதைக் குமுதம் நிறுத்தணும். தவறினா, குமுதம் பத்திரிகையைத் தடை செய்யணும்னு பெரிய போராட்டமே நடத்தணும்” என்று வெடித்தான்.

“நீ மட்டும்தான் இப்படிக் குமுறிக் கொந்தளிக்கிறே. இந்தச் ‘ச்சீய்...’க் கதை அஞ்சாறு வாரமா வருது.. குடும்பத் தலைவர்கள், தலைவிகள், பொது நலவாதிகள்னு யாருமே வாய் திறக்கலையேடா. இனியும் பெணாத்தாதே. உன் வேலையை மட்டும் பாரு” என்று நண்பனைக் கடிந்துகொண்டான் விவேக்.

அவனுக்குப் பதில் தரும் வகையறியாமல் உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருந்த நம் குணாளன், “இனியும் இந்தக் குமுதம் என் வீட்டு வாசப்படிகூடத் தாண்டக் கூடாது. என் தாத்தா பாட்டிகிட்டேயும் சொல்லிடுறேன்” என்று நண்பனிடம் சூளுரைத்துவிட்டுத் தன் வீட்டுக்குக் கிளம்பினான்.

வீட்டுக் கதவு சாத்தியிருந்தது.

கதவைத் தட்ட அவன் கை நீண்ட போது, உள்ளே தாத்தாவும் பாட்டியும் பேசுவது கேட்டது.

எழுபது வயதான பாட்டி, என்பது வயதுத் தாத்தாவிடம் சொன்னாள்: “குணா, கண்ணாடி எங்கே, கண்ணாடி எங்கே?ன்னு கேட்டுட்டே இருக்கான்”.

”மறந்தும் கொடுத்துடாதே” என்று கடுமையாக எச்சரித்தார் தாத்தா.

’அந்த அசிங்கக் கதையை நான் படிச்சுடக் கூடாதுன்னு தாத்தா நினைக்கிறார். அவருக்குத்தான் என் மேல எவ்வளவு அக்கறை?’ன்னு நினைச்சி சந்தோசப்பட்டான் குணாளன்; மெய் சிலிர்த்தான்!

ஆனா, அப்புறம் தாத்தா சொன்னதைக் கேட்டதும் அந்தச் சந்தோசம் போன இடம் தெரியவில்லை.

தாத்தா சொன்னது....................

“கோலப்பன்னா கோலப்பன்தான். இந்த ’எழுத்துச் சித்தன்’ என்னமா எழுதுறான்! படிக்கும் போதே ‘அது’க்கான மூடு வந்து சூட்டக் கெளப்புது. இன்னும் எத்தனை கதை எழுதுவானோ தெரியல. அதுவரைக்கும் நம் பேரனுக்குக் கண்ணாடியைக் கண்ணில் காட்டிடாதே. குமுதம் வாங்குறதையே அவன் நிறுத்திடுவான்”.

“நிறுத்தினா என்ன?” என்றாள் பாட்டி.

“நிறுத்தினா என்னவா, பல வருசங்களுக்கு அப்புறம், இந்தச் ‘ச்சீய்..!’ கதைகளைப் படிச்சித்தான் ‘அது’ பண்ணனும்னு எனக்கு ’மூடு’ வந்திருக்கு.. இன்னும் எத்தனை வாரம் எழுதுவானோ? அதுவரைக்கும் கண்ணாடியைப் பேரன் கண்ணில் காட்டிடாதே” என்றார் தாத்தா.

”நானும் செம மூடில்தான் இருக்கேன். சீக்கிரம் ஆரம்பிச்சுடுங்க. குணாளன் வர்ற நேரமாச்சு” என்று தாத்தாவை அவசரப்படுத்தினாள் பாட்டி.

“இன்னிக்கி வேண்டாம். ’உச்சத்தை’த் தொட முடியாது. அடுத்த இதழோட குமுதம்காரன், ‘வயாகரா’ இலவச இணைப்பா அனுப்புறானாம். அதுவரைக்கும் மனசைக் கட்டுப்படுத்தி வை” என்றார் தாத்தா.

அவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த குணாளன், ”அடக் கடவுளே, இதெல்லாமும் உன் திருவிளையாடல்தானா?” என்று சொல்லித் தலைதலையாய் அடித்துக்கொண்டு தரையில் சரிந்தான். அவன் சுய நினைவு பெற நீண்ட நேரம் ஆனது!

oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo









8 கருத்துகள்:

  1. நண்பர் தனபாலனுக்கு என் நன்றி.

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  2. குமுதம் வாங்கினேன் இன்னும் படிக்கல.
    எங்கயோ வச்சுட்டனே!தேடி எடுத்துடறேன்.

    பதிலளிநீக்கு
  3. தங்கள் வருகைக்கு நன்றி சேக்காளி.

    //உவ்வே//

    ரசனைக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  4. ஒரு தடவை படிக்கலாம் முரளிதரன்.

    ’வாய்மொழி’ வழி சொல்லப்பட்டு வந்த கதைகள்தான்.

    இப்போது எழுத்துவடிவம் பெறுகின்றன.

    பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன், ‘தாய்’ [எப்போதோ நின்றுவிட்டது]பத்திரிகையில் இம்மாதிரிக் கதைகள் நிறைய எழுதினார்.

    புத்தகமாகவும் வந்திருக்கிறது.

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு