அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

தாய்க்குலம் ஜாக்கிறதை!!!

தேனாம்பேட்டை காமராசர் அரங்கில் வேலை பார்த்த ‘வளர்மதி’ , காவல்துறையிடம் அளித்த புகாரின்பேரில் கைதாகவிருந்த  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே எஸ். இளங்கோவன் முன் ஜாமீன் பெற்றிருக்கிறார்.

உயர்நீதிமன்ற ஆணையின்படி, மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் கையெழுத்திட அவர் நேற்று மதுரை சென்றிருந்தார்.

தான் தங்கியிருந்த விடுதியிலிருந்து அவர் வெளியே வந்தபோது அங்கு காத்திருந்த அ.தி.மு.க.வினர் கற்களையும் செருப்புகளையும் சரமாரியாக வீசினார்கள் என்பது இன்றைய[28.08.2015] நாளிதழ்ச் செய்தி.

அவர் காவல் நிலையம் சென்றடைந்தபோது, அங்கு காத்திருந்த பெண்கள் சிலர் துடைப்பம், செருப்பு, முட்டை போன்றவற்றால் அடிப்பதுபோல் பாவனை செய்ததோடு இளங்கோவனுக்கு எதிராக ஆபாச வார்த்தைகளால் முழக்கம் செய்திருக்கிறார்கள்.

அவற்றில் ஒரு காட்சியைத்தான் கீழே காண்கிறீர்கள்.
ஒரு கொலையைச் செய்தவன் குற்றவாளி என்றால் அவனைக் கொலை செய்ய முயலுகிற இன்னொருவனும் குற்றவாளியே. ஒருவன் இன்னொருவனை ஆபாச வார்த்தைகளால் திட்டுவது குற்றம் என்றால் திட்டியவனை வேறொருவன் அவ்வாறு திட்டுவதும் குற்றமே. குற்றம் புரிகிற எவருமே தண்டிக்கப்படுதல் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

மோடி - ஜெயலலிதா சந்திப்பை இளங்கோவன் கொச்சையாக விமர்சித்தது குற்றம் எனின், அவர் மீது செருப்புகளையும் துடைப்பங்களையும் வீசுவதுபோல் பாவனை செய்து[சிலர் வீசியும் இருக்கலாம்] அசிங்கமாக முழக்கமிடுவதும் குற்றம்தானே?

தலைவர்களின் உருவப் படங்களைச் செருப்பால் அடித்துத் தீ வைத்து எரிப்பது[இதைச் செய்பவர்களும் தண்டனைக்குரி்யவர்கள்தான்] மட்டுமே கடந்த காலங்களில்[பெரும்பாலும்] இங்கு இடம்பெற்ற நிகழ்வாக இருந்தது. அண்மைக் காலங்களில், மேற்கண்டவாறு செருப்புகளையும் துடைப்பங்களையும் காட்டி அவமானப்படுத்தும் நிகழ்வுகள் அதிகரித்துவிட்டன.

நம் தாய்மார்களே[“கூலிப்படை!” - இளங்கோவன்] இம்மாதிரி இழிசெயல்களில் பெரிதும் ஈடுபடுகிறார்கள்.

அம்மனின் அருளாசி பெற்ற தாய்க்குலம் என்பதாலோ என்னவோ இவர்கள் கைது செய்யப்படுவதும் இல்லை; தண்டிக்கப்படுவதும் இல்லை!

எனக்கென்னவோ இவர்களைக் காண்கிறபோதெல்லாம், இராவணனால் இலங்கைக்குக் கடத்திச்செல்லப்பட்ட சீதாப்பிராட்டிக்குக் காவல் புரிந்தார்களே அந்த அரக்கர் குலப் பெண்மணிகள்தான் நினைவில் வந்து வந்து போகிறார்கள்!!!
*****************************************************************************************************************************************************













































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக