எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

வியாழன், 16 நவம்பர், 2017

காந்தி கண்ட கனவும் சிங்கப்பூர்ப் பெண்களும்!....[பத்து வரிப் பதிவு]

‘அழகான இளம் பெண்கள், நகையணிந்து நட்ட நடு இரவில் அச்சமின்றித் தன்னந்தனியாக நடந்து செல்லும் நிலை உருவாகும்போதுதான் நம் நாடு சுதந்திரம் பெற்றதாகக் கருத முடியும்’ என்றார் காந்தியடிகள்.

காந்தி கண்ட கனவை அவர் வாழ்ந்த இந்தப் புண்ணிய பாரதம் நனவாக்கவில்லை. குட்டி நாடான சிங்கப்பூர் அதைச் சாதித்திருக்கிறது. வாழ்க சிங்கம் நிகர் ‘சிங்கை’ ஆடவர்கள்!

சிங்கப்பூரில்.....

#பெண்கள், குறிப்பாக, நகையணிந்த  இளம் பெண்கள் தத்தம் பணி முடித்து, நடந்தோ வாகனங்களை ஓட்டிக்கொண்டோ நள்ளிரவில் கொஞ்சமும் அச்சமின்றி வீதிகளில் செல்கிறார்கள்#
=====================================================================================
நன்றி: பேரா.பா.சீதாராமன், ‘சிங்கையில் 50 நாட்கள்’, ஸ்ரீவிவேகானந்தர் கொடை மற்றும் அறக்கட்டளை, தர்மபுரி. முதல் பதிப்பு: 2008.