அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

அதென்ன 'நானோ டெக்னாலஜி'[Nanotechnology]?

'நானோ' என்பதற்கு அதி நுட்பமான என்று பொருள். 

'மைக்ரோ' என்பது 10 லட்சத்தில் ஒரு பகுதி. நானோ அதைவிட ஆயிரம் மடங்கு நுட்பமான சில்லுகளும் அதற்கொத்த உதிரிப் பாகங்களும் கொண்டு சாதனங்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பம்.

ந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் எறும்பு வடிவிலான ரோபாட்டுகள் செய்து, நம் உடம்புக்குள் அனுப்பி உறுப்புகளைப் பழுது பார்க்கலாம்.

நுண்ணியிரிகள்[பாக்டீரியா] வடிவில் ஒரு ரசாயன ஆராய்ச்சி சாலையையே அனுப்பிப் பெட்ரோல்கூட உற்பத்தி செய்யலாம்.

அமெரிக்க எம்.ஐ.டி.யின் ஏஐ[செயற்கை அறிவு] ஆராய்ச்சி சாலையின் இயக்குநர் 'ராட்னி ப்ரூக்ஸ்' எழுதிய கட்டுரையைப் படித்தால் பிரமிப்பாக இருக்கும்.

சிலிக்கான் சிப்களையும் டி.என்.ஏ.ஜினோம்களையும் கலக்கும் பாக்டீரியல் ஆராய்ச்சி தீவிரமடைந்திருக்கிறது. இதன் மூலம்.....

மரத்தை வளர்த்து, அதை வெட்டிப் பலகைகளாக்கி மேஜையாக மாற்றுவதற்குப் பதிலாக, மேஜையாகவே வளரக்கூடிய விதைகளைத் தயாரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதே போல.....

கண்ணுக்குள் சிலிக்கன் சிப் ஒன்றை வைத்து, நேரடியாக மூளைக்குக் காட்சிகளை அனுப்பும் ஆராய்ச்சியும் நடைபெறுகிறது.

இன்னும் ஐம்பது வருடங்களில் மனிதனும் இயந்திரமும் இரண்டறக் கலந்துவிடுவார்கள். 

தலைப்புக் கேள்விக்கான பதிலைத் தந்தவர் மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள்.
 ------------------------------------------------------------------------------------------------------------------
தகவல் இடம்பெற்ற நூல்: 'சுஜாதாவைக் கேளுங்கள்', குமுதம் பு[து]த்தகம் வெளியீடு; முதல் பதிப்பு: ஜனவரி 2009.

நன்றி: குமுதம்
------------------------------------------------------------------------------------------------------------------

சுஜாதாவின் தமிழ் மொழி மீதான பற்றினை வெளிப்படுத்தும் இன்னொரு பதில்.....

கேள்வி:
தமிழைவிட சஸ்கிருதம் உயர்வானது என்று சொல்லும் ஜெயகாந்தனின் கருத்தில் தங்களுக்கு உடன்பாடு உண்டா?

சுஜாதா பதில்:
ஜெயகாந்தன் மிகச் சரியாக என்ன சொன்னார் என்பதை முதலில் கண்டுபிடியுங்கள். இதுதான் சமயம் என்று ஆளாளுக்கு அவரவர் கருத்தை ஜே.கே.யின் மீது திணிக்கிறார்கள். 

எந்த எழுத்தாளனும் தான் எழுதும் மொழியைவிட மற்ற மொழி உயர்ந்தது என்று சொல்லமாட்டான். மேலும், சமஸ்கிருதத்தில் 'சில நேரங்கள்...' எழுத முடியாது.
------------------------------------------------------------------------------------------------------------------



5 கருத்துகள்: