எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 29 ஏப்ரல், 2019

சூபி ஞானி மனம் இரங்குவாரா?!

உத்திரப் பிரதேச மாநிலத்தில் 'ஆம்ரோகா' என்னும் ஊரில் ஒரு தர்கா உள்ளது. அங்குள்ளஷா விலாயட்டின் சமாதியான தர்கா வளாகத்தில், பாம்பு, தேள், நட்டுவாக்கிளி, பூரான் போன்ற கொடிய விஷம் கொண்ட  உயிரினங்கள் உள்ளனவாம்.  

மிக மிகப் பல ஆண்டுகளாகவே, இந்த உயிர்கள் அங்கு வருகை புரியும் பக்தகோடிகளில் எவரையும் கடித்ததே இல்லையாம். பக்தர்கள் அவற்றைத் தத்தம் கைகளில் ஏந்தியவண்ணம் செல்ஃபி எடுத்து மகிழ்கிறார்களாம். விரும்புகிறவர்கள், தாம் விரும்பும் விஷ ஜந்துவைத் தம் வீடுகளுக்குகூட எடுத்துச் செல்லலாமாம். [ஆனால், குறிப்பிட்ட சில நாட்களில் திரும்பவும் அவற்றைத் தர்காவில் சேர்த்துவிடவேண்டும் என்பது விதியாம். தவறினால் அவற்றால் தீங்கு நேருமாம்][29.04.2019 தமிழ் நாளிதழ்கள்] அதற்கான காரணம்.....

சூபி ஞானி[13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்] அவர்களின் அருள்பாலிப்புத்தானாம்!

ஞானி அவர்கள் நிகழ்த்தும் இந்த அதிசயம் அனைத்து மக்களின் மனங்களிலும் பேரானந்தத்தை நிரப்ப வல்லதாகும்.

சமாதியான சூபி ஞானி அவர்களின் அருள் உள்ளத்தை மனமாரப் போற்றுவதோடு ஒரு வேண்டுகோளையும் அவர் முன் சமர்ப்பிக்கிறோம். அது.....

''தங்களின் அருள்பாலிப்பால், விஷ ஜந்துக்கள் எல்லாம் சாது ஜந்துக்களாக மாறுவது தர்காவில் நிகழ்வதோடு, விரிந்து பரந்து கிடக்கும் இந்த மண்ணுலகம் முழுதும் நிகழ்தல் வேண்டும்'' என்பதே.
==================================================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக