பக்கங்கள்

புதன், 24 ஜூலை, 2019

மஹா பெரிய கடவுளும் அவரின் வாரிசுகளும்!!!

ஒரு பத்திரிகை ஆசிரியர், புகைப்படக்காரர்களுடன் ‘மஹாஆஆஆ... பெரியவாவைத் தரிசிக்கப் போனாராம். கடவுளின் அவதாரமான அந்த மகானும் தரிசனம் தந்தாராம்.

அதுசமயம், புகைப்படக்காரர்கள் மஹா பெரியவாவிடம் அனுமதி பெறாமலே அவரைப் படம் எடுக்க ஆரம்பித்தார்களாம்.

மகானின் அனுக்கிரஹம்[அனுமதி] இல்லாமல் படம் எடுக்கக் கூடாது என்று பத்திரிகை ஆசிரியர் நினைத்தாரே தவிர அதைச் சொல்ல அவகாசம் இல்லாமல் போனதாம். மகா பெரியவாவும் மௌனம் சாதித்தாரே தவிர வாய் திறந்து ஏதும் சொல்லவில்லையாம்.

தவறு நடந்துவிட்டதே என்று வருந்தியவாறு ஆசிரியர் தன் ஆட்களுடன் அலுவலகம் திரும்பினாராம். அப்புறம் என்ன நடந்தது? கீழே உள்ள நகல் படிவத்தை வாசியுங்கள்.
இப்படியும் ஓர் அதிசய நிகழ்வா? நீங்கள் நம்புகிறீர்களா?

நான் நம்பலீங்க. ஆனாலும், ஒரு சோதனையை நிகழ்த்திப் பார்க்கணும்னு முடிவு செய்தேன். முடிவுக்கிணங்க.....

நிலவுலகில், ஒரு கடவுளாக நடமாடிக்கொண்டிருந்த மகா பெரியவா சிவலோக பதவி பெற்றுவிட்டதால், அவருடைய திருவுருவத்தை[புகைப்படம்] என் பேசி மூலம் படம் எடுத்தேன்.
[நன்றி: தினமலர்]

படம் பதிவாகவே இல்லைங்க! படம் இருக்கவேண்டிய இடத்தில் கரும்புகை சூழ்ந்திருந்ததைக் கண்டு பெருவியப்பில் மூழ்கிப்போனேங்க.

நம்புங்க. நம்பலேன்னா நீங்களும் மகா பெரியவாவின் படத்தை உங்களின் புகைப்படக் கருவியில் ஒரு தடவை ‘கிளிக்’ செய்து பாருங்களேன்! 
=======================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக