அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 29 நவம்பர், 2020

அமேசான் சந்தாதார்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!

அன்புடையீர்,

அமேசான் கிண்டிலில் வெளியிடப்பட்டுள்ள என் நூல்களின்[33] பட்டியலைப் பதிவு செய்துள்ளேன். நீங்கள் அமேசானின் சந்தாதாரராக இருப்பின், பட்டியலில் உள்ள நீங்கள் விரும்பும் ஒரு நூலையோ பலவற்றையோ இலவசமாக உங்களால் படிக்க இயலும்.

தேர்வு செய்ய வசதியாக அவற்றை வகைப்படுத்தியுள்ளேன்.

ஏதேனும் ஒரு வகையில் இவை உங்களுக்குப் பயன்படக்கூடும் என்பது என் நம்பிக்கை. நம்பிக்கை மெய்ப்படுமாயின் மிகவும் மகிழ்வேன்[வாசிக்கப்படும் பக்கங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுக் கணிசமான தொகையை வழங்குகிறார்கள் என்பது நீங்கள் அறியத்தக்கது. விற்பனையானால் மட்டுமே ஓரளவுக்கு வருமானம் பெறலாம்].

நன்றி.

அமேசானில் என் ['பசி'பரமசிவம்] நூல்கள்: 

கதைகள்(14 நூல்கள்):

*காமம் பொல்லாததுஉடலுறவு இச்சையைக் கருப்பொருளாகக் கொண்ட சிறுகதைகளின் தொகுப்பு.

*'சுருக்'...'நறுக்' வாழ்வியல் கதைகள்: அன்றாட வாழ்வைப் பல்வேறு கோணங்களில் சுவைபடச் சொல்லும் படைப்புகள்.

*சிலிர்ப்பூட்டும் 20ஆம் நூற்றாண்டுத் தமிழ்ச் சிறுகதைகள்!: திருச்சி வானொலியில் நான் ஆற்றிய பேருரையின் வரிவடிவம்.

*ஒரு பக்கக் கதைகளில் ஒரு புரட்சி!!!: முற்றிலும் மாறுபட்ட, புதிய பார்வையில் உருவான ஒரு பக்கக் கதைகள்.

*கொங்குநாட்டுப் பங்காளிகளின் கதைகள்: கொங்குநாட்டு மக்களின் அறியாமையையும் பலவீனங்களையும் எதார்த்தமாக விவரிக்கும் கதைகள்.

*100% உண்மைக் கதைகள்: உண்மைச் சம்பவங்களை ஆதாரமாகக் கொண்டு கற்பிக்கப்பட்ட மனதைக் கவரும் கதைகள்.

*சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது!: நகைச்சுவை விருந்தளிக்கும் படைப்புகள்.

*கிளு கிளு’...‘குளு குளு’ கதைகள்: ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டும் நகைச்சுவைக் கதைகள்.

*அடடா இந்தப் பெண்கள்!!!: பெண்களின் தன்மானம், துணிவு, இயலாமை போன்ற குணங்களை உள்ளடக்கமாகக் கொண்ட படைப்புகள்.

*சதையும் கதையும்: கட்டுப்பாடற்ற காம இச்சையால் வாழ்விழந்த  மாந்தர்களின் கதைகள்.

*செல்லம்மா தேவி: [நாவல்]  பகுத்தறிவும் பட்டறிவும் வாய்க்கப்பெற்ற ஒரு சாதனைப் பெண்ணின் கதை.

*அம்மம்மா...அம்மா!!!: குறுநாவல்ஒரு பாசமிகு தாயின் தியாகத்தைக் காட்சிப்படுத்தும் கதை.

*உள்ளுறை காமம் [குறுநாவல்]: காம உணர்வைக் கட்டுப்படுத்தும் வகையறியாது அல்லாடும் மாந்தர்கள் குறித்த கதை.

*பத்து ரூபாயில் கடவுள்:  கடவுளின் கருணை குறித்தும், வாழ்வியல் அவலங்கள் பற்றியும் ஆராயும் கதைகளின் தொகுப்பு.

கட்டுரைகள்(19 நூல்கள்):

கடவுள்(5):

*நாத்திகம் போற்றுவோம்!: கடவுள் மறுப்பு, மகான்களின் இழிதகைமை, முற்போக்குச் சிந்தனையாளர்களின் பெருந்தன்மை போன்றவற்றை விவரிக்கும் பதிவுகள்.

*பொல்லாத மரணமும் புரியாத உயிரின் இருப்பும் (கடவுளின் மரணம்!!!] உயிர், மரணம் ஆகியவை குறித்த நுண்ணாய்வுப் பதிவுகள்.

*கானல்நீர்க் கடவுள்கள்!!!:கடவுளின் இருப்பு, ஆற்றல், குணம், தேவை ஆகியன பற்றி மிக நுட்பமாக  ஆராயும் கட்டுரைகள்.

*சாத்தானே என் கடவுள்!!!: சாத்தான் எனப்படும் தீய சக்தியைக் கடவுளுடன் தொடர்புபடுத்தி ஆராயும் கட்டுரைகள்.

*சாகாத சாமிகளும் சாகப் பிறந்த மனிதர்களும்: பக்தி, மதம், கடவுள் போன்றவை குறித்த சாடல் பதிவுகள்.

ஆன்மா, விதி(2):

*ஓடி ஒளியும் ஆன்மாவும் தேடி அலையும் மனிதகுலமும்: மரணம், ஆன்மா, உயிர்ச்சக்தி போன்றவை பற்றிய ஆழ்சிந்தனைப் பதிவுகள்.

*மசுரு விதிஊழ் எனப்படும் விதி பற்றிய 07 ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு.

பிரபஞ்சத் தத்துவம்(3):

*விந்து சுமப்பவன்: பிரபஞ்சப் புதிர், நிலையாமை, வெறுமை, சிந்தித்தல் என, பல்துறை சார்ந்த ஆய்வுத் தொகுப்பு.

*நான் கேள்வியின் நாயகன்! படைப்புத் தத்துவம், வலைத்தளங்கள் போன்றவை குறித்த ஆய்வுகள்.

*காமத்திலிருந்து தியானத்திற்கு!ஞானம், தியானம், காமம், பரம்பொருள் ஆகியவற்றைத் தொடர்புபடுத்தி வரையப்பட்ட கட்டுரைகள்.

மூடநம்பிக்கை(5):

*மூடர் யுகம்: பல்வேறு மூடநம்பிக்கைகளைப் பட்டியலிட்டுச் சாடும் பதிவுகள்.

*நான் மூடன்! நீங்கள்?மூடநம்பிக்கை குறித்த கதைகளும் கட்டுரைகளும்.

*நான் இன்னொரு ஹிரண்யன்!!!: கடவுள் நம்பிக்கையின் பெயரால் நிகழ்த்தப்படும் மூடச் செயல்களைச் சாடும் கட்டுரைகள்.

*பக்தி படு[ம்]த்தும் பாடு!  பக்தியால் விளையும் கெடுதிகள், அதன் மூலம் பிழைப்பு நடத்தும் போலிச் சாமியார்களின் மோசடிகள் என்பன குறித்த அலசல் கட்டுரைகள்.

*ஜோதிடச் சனி!: ஜோதிடர்களால் பரப்பப்படும் மூடத்தனங்களால்  மக்கள் படும் துன்பங்களைப் படம்பிடிக்கும் பதிவுகள்.

மற்றவை(4):

*மருட்டும் மகான்களும் அச்சுறுத்தும் அவதாரங்களும்!: மகான்கள், அவதாரங்கள் எனப்படுவோரும் மனிதர்களே என்பதைத் தெளிவுபடுத்தும் கட்டுரைகள்.

*வாருங்கள்...சாகும்வரை சிந்திக்கலாம்!!!:  நான் படைத்த 22 நூல்களுக்கான முன்னுரைகளின் தொகுப்பு.

*அற்ப ஆயுளில் ‘கற்பு’ !!! பெண்களும் கற்பொழுக்கமும் குறித்த விரிவான ஆய்வுகளின் தொகுப்பு.

*தமிழா தூங்குடா! தூங்கு!!:  தமிழனின் அறியாமையையும், இயலாமையையும், பலவீனங்களையும் காட்சிப்படுத்தும் அரிய கட்டுரைகள்.

===============================================================