சனி, 18 செப்டம்பர், 2021

மூடநம்பிக்கை வளர்ப்பில் 'முன்னணி' வகிக்கும் இந்தியா!!!


லகளவில் 36% மதமறுப்பு மற்றும் நாத்திகவாதிகள் உள்ளனர். இவர்கள் மதங்களில் உள்ள மூடநம்பிக்கைகள் மற்றும் முரண்பாடுகளை எதிர்க்கின்றனர். இவை அனைத்தையும் அறிவியல் ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்கின்றனர். 

வளர்ச்சியடைந்த நாடுகளில் நாத்திகவாதிகளே அதிகளவில் உள்ளனர். வளர்ச்சி அடைந்த நாடுகளில் அறிவியல் வளர்ந்திருப்பதால் அனைத்தையும் அறிவியல் நோக்குடன் ஆராய்கிறார்கள். இதனால் அங்கு மூடநம்பிக்கைகள் குறைந்துள்ளன.

வளர்ச்சி அடையாத நாடுகளில்  மூடநம்பிக்கைகள் அதிகம் உள்ளன. காரணம், அறிவியல் பார்வை மிகவும் குறைவாகவே இருப்பதுதான். இதனால், மதமறுப்பு மற்றும் நாத்திகவாதிகளின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது.

"ஆழ்ந்து சிந்திக்கும் ஆர்வமோ அதற்குரிய மனப்பக்குவமோ இல்லாத காரணத்தால்,  மனிதன் மதத்தை நாடுகிறான்; அறிவியலுடன் முரண்படுகிற அமானுஷ்யங்கள் மீது அதிக நாட்டம் கொள்கிறான்" என்கிறார் மதங்கள் பற்றிய ஆய்வுகளில் நிபுணத்துவம் பெற்றிருந்த ரடல்ப் ஓட்டோ ( Rudolf Otto 1869 – 1937) என்பவர். 

"மதம் இல்லாமல் வாழ முடியாத சூழ்நிலைக்கு மனிதன் தள்ளப்பட்டுள்ளான். மதம் ஒரு போதையூட்டும் பொருள். மனிதனுடைய பண்பாட்டு வளர்ச்சிக்கு மதம் ஒருபொழுதும் பயன்படுவதாக இருக்காது. இது தேவையற்ற ஒன்றாகவே உள்ளது" -கார்ல் மார்க்ஸ்.

உலகளவில்.....

மத நம்பிக்கை உடையவர்கள் - 59 %

மத நம்பிக்கை இல்லாதவர்கள் - 23%

உலகளவில் படிப்பாளிகளிடம் மத நம்பிக்கை குறைவாக உள்ளது. கல்வியறிவு இல்லாதவரிடம் மத நம்பிக்கை அதிகம் உள்ளது. வறுமையில் வாடுபவர்களே மதத்தின்மீது அதிக நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். 

மத நம்பிக்கையற்றவர்கள் தங்களுக்கு மதத்தின்மீது நாட்டமில்லை என்றாலும் அனைத்து மதம் சார்ந்த மக்களை மாண்போடு நடத்துகிறார்கள். இந்த மாண்பு, மிக மிகப் பெரும்பாலான மதவாதிகளிடம் இல்லை.

மதப் பற்றாளர்களுக்குப் பிற மதங்கள் போதிக்கும் நல்ல கருத்துகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அல்லது புரிதல் இல்லை. பிறமதத்தினரை இழிவாக நினைப்பதும் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபடுவதும் வாடிக்கையாகி வருகிறது. ஆனால், மதமறுப்புக் கொள்கையுடையவர்கள் மத மோதல்களைத் தடுப்பதற்குப் பெரிதும் பாடுபடுகிறார்கள்.

மதங்களே இல்லை என்றாலும் மக்கள் வாழ்க்கையில் எந்தவொரு பாதிப்பும் நிகழாது.

உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் கடவுளால் உருவாக்கப்பட்டவை. இவற்றிற்கென்று தனித் தனி ஆன்மாக்கள் உள்ளன என மத நம்பிக்கையாளர்கள் கூறுகின்றனர். 

உண்மையில், உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும், பரிணாம வளர்ச்சியின் காரணமாக உருவானவை. இவற்றிற்கு ஆன்மாக்கள் உள்ளன என்பது அப்பட்டமான கற்பனை.

உலக அளவில் நாத்திகவாதிகள் & எந்த நம்பிக்கையும் இல்லாதவர்களுக்கான ஒரு பட்டியல்:

1. சீனா 1430479

2. ஜப்பான் 16 31 31 22

3. கிரீஸ் குடியரசு 20 48 30 2

4. பிரான்ஸ் 37 34 290

5. தென் கொரியா 52 31 152

6. ஜெர்மனி 51 33 15 1

7. நெதர்லாந்து 43 42 14 1

8. ஆஸ்ட்ரியா 42 43 10 5

9. ஐஸ்லாண்டு 57 31 10 2

10. ஆஸ்திரேலியா 37 48 105

11. அயர்லாந்து 30 44 10 16

இந்தியா ?!?!?!

இந்தியாவில் மதவெறியர்களின் ஆதிக்கம் நாளும் அதிகரிப்பதால், மூடநம்பிக்கைகளின் அளவு கட்டுக்கடங்காமல் பெருகிக்கொண்டிருக்கிறது. இந்நிலை நீடிக்கும்வரை இங்கு 'வளர்ச்சி' என்பது வெறும் ஏட்டளவில் மட்டுமே.

நாட்டின் முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை கொண்டவர்கள் ஒருங்கிணைந்து அதிதீவிரமாகச் செயல்பட வேண்டிய தருணம் இதுவாகும்!

====================================================================================

ஆதார நூல்: 'மதங்களின் பெண்கள்'  -B.E. ஜார்ஜ் டிமிட்ரோவ்

ஆசிரியரின் மின்னஞ்சல் முகவரி - george1sasy@gmail.co