எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

வாசிப்பில் சாதனை நிகழ்த்திய என் புதிய நூல்['கிண்டெல்' வெளியீடு]!

அமேசான் கிண்டெலில் வெளியாகியுள்ள கீழ்க்காணும் என் நூலில்[38ஆவது], கடந்த இரண்டு நாட்களில் கிண்டெல் வாசகர்களால் 1000க்கும் மேற்பட்ட பக்கங்கள் வாசிக்கப்பட்டுள்ளன[இது வாசிக்கப்பட்ட பக்கங்களின் கூட்டுத்தொகை. விற்பனை மட்டுமல்லாமல் வாசிக்கப்படும் பக்கங்களையும் கணக்கிட்டுப் பணம் கொடுக்கிறது அமேசான் நிறுவனம்].

என்னுடைய வேறு எந்த நூலும்['காமம் பொல்லாதது' உட்பட] இந்தச் சாதனையை நிகழ்த்தவில்லை.

மேற்கண்ட வாசிப்புக் கணக்கைச் சற்று முன்னர்தான் பார்க்க நேரிட்டது. உடனடியாக உங்களுடன் பகிர்கிறேன்[நாளை காலையில் பகிரலாம் என்றால் 'ஆசை மனம்' அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறது!].

இதெல்லாம் ஒரு சாதனையா என்று கிண்டல் செய்திட வேண்டாம். மிக எளிய எழுத்தாளனான எனக்கு இதெல்லாம்தான் சாதனை.

கிண்டெல் சந்தாதாரராக நீங்கள் இருந்தால் இதை வாசிப்பீர்கள என்பது என் நம்பிக்கை.

நன்றி.

கடவுள் கண்ட கனவு!: கட்டுரைகள்&கதைகள் (Tamil Edition) Kindle Edition