பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

'அந்த' 4 நாட்களில் 'உங்கள் கடவுள்' என்ன செய்துகொண்டிருந்தார்?

ருவன் மனதில் கட்டுக்கடங்காத காமம் குமிழி விட்டுக் கொந்தளித்துக்கொண்டிருந்தது. அதைத் தணிப்பதற்கு ஒரு பெண் கிடைக்காமல் தவியாய்த் தவித்துக்கொண்டிருந்தான்.

ஊரை ஒட்டிய காட்டுப் பகுதியில் இருந்தது அவன் வீடு. அவன் மட்டுமே அதில் இருந்தான்.

விறகு சேகரிக்க வந்த ஒரு சிறுமி தாகம் தணிக்கத் தண்ணீர் கேட்டு அவனின் வீட்டு வாசலில் வந்து நின்றாள். தன் பல நாள் தாகத்தைத் தணிக்க உரிய நேரம் வந்ததாக நினைத்து அவளை வீட்டுக்குள் தூக்கிப்போனான் அவன். தாகம் தணிப்பதில் தீவிரம் காட்டினான். 

அவனிடமிருந்து தப்பிச்செல்லும் போராட்டத்தில் அவள் தோற்றுப்போனாள். 

அவனின் தாகம் தணிந்தது.

தாகம் முற்றிலுமாய்த் தணிந்துவிட்ட நிலையில் அவனின் மன நிலை என்னவாக இருக்கும்?

"ஒரு சின்னஞ்சிறு பெண்ணின் வாழ்வைச் சீரழித்துவிட்டோமே" என்று சில கணங்களாவது வருந்துவான்தானே?

அப்படி வருந்தும் மனம் அவனுக்கு இருந்தால் நிச்சயமாக அவனை "அவனும் மனிதன்தான்" என்று சொல்லலாம்.

இது, என் கற்பனையில் உருவான நிகழ்வு.

இப்போது ஓர் உண்மை நிகழ்வு உங்களின் கவனத்திற்கு.

பீகார் மாநிலத்தில், 'பக்சர்' மாவட்டத்தில் 'முரார்' காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கிராமம்.

அந்தக் கிராமத்தின் 13 வயதுச் சிறுமி ஒருத்தி வீட்டு வேலையாக வெளியே செல்கிறாள். 6 பேர் அடங்கிய காலிகள் கூட்டம் அவளைப் பாட்னாவுக்குக் கடத்திச்சென்று ஒரு வீட்டில் அடைத்து வைத்துப்[2 காலிகள் அதில் குடியிருந்தவர்கள்] பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்துகிறார்கள்.

இப்போது மேலே கேட்கப்பட்ட கேள்வியை["ஒரு சின்னஞ்சிறு பெண்ணின் வாழ்வைச் சீரழித்துவிட்டோமே என்று சில கணங்களாவது வருந்துவான்[ர்கள்]தானே?] இங்கும் கேளுங்கள்.

முதல் தடவை வன்புணர்வு செய்த உடனேயே[வெறி தணிந்த நிலை] ஆறு பேரும் மனம் இரங்கிச் சிறுமியை விடுவித்திருப்பார்கள் என்று நம்பத் தோன்றுகிறதுதானே? ஆனால், அது நடந்திடவில்லை.

ஆறு கயவர்களும் 4 நாட்கள்  அவளைக் கூட்டு வன்கொடுமை நிகழ்த்திச் சித்திரவதைக்குள்ளாக்கினார்கள்.

6 பேரில் ஒருவன்கூட மனிதன் இல்லை; 100% மிருகங்கள். 

மனிதர்களில் நல்லவர்கள் இருக்கிறார்கள். தம் உயிரைப் பணயம் வைத்து இவ்வாறு பாதிக்கப்படும் பெண்ணுக்கு உதவுபவர்களும் உள்ளனர். ஆனால்.....

ஒரு தனி வீட்டில் சிறுமி அடைக்கப்பட்டிருந்ததால் இந்தக் கொடூர நிகழ்வைக் காணும் வாய்ப்பு எவருக்கும் அமையவில்லை.

மனிதர்களுக்கு வாய்க்கவில்லை என்பது சரி. கருணை வடிவான ஈஸ்வரன், கிருஷ்ணன், கர்த்தர், அல்லா[ஹ்] என்று உலகறிந்த கடவுள்கள் ஏராளமாக இருக்கிறார்களே, அவர்களில் ஒருவரின் பார்வையில்கூடவா இந்த அதி பயங்கர அவலக் காட்சி தட்டுப்படவில்லை?!

தாங்கள் படைத்த உயிர்களைப் பாதுகாப்பதைத் தவிர்த்து, தினம் தினம் வேறு என்னதான் செய்துகொண்டிருக்கிறார்கள் இந்தக் கடவுளர்கள்?!

                                          *   *   *   *   *

***சிறுமியின் உடல்நிலை மோசமாகிவிட்ட கட்டத்தில்தான் அந்த ரவுடிக் கும்பல் அவளை அழைத்துச் சென்று தும்ரான் ரயில் நிலையத்தில் சேர்த்தது, அவள் எப்படியெல்லாமோ சிரமப்பட்டுத் தன் வீடு சேர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தது என விரிவான செய்தி அறிய விரும்புவோர்  https://www.msn.com/en-in/news/other/minor-gang-raped-by-6-men-for-4-days-in-bihar-abandoned-at-railway-station/ar-AA10Vmxf?ocid=msedgdhp&pc=U531&cvid=7d310a11dc85489da1dce5b3c1376a73 என்னும் முகவரிக்குச் செல்லலாம்.

===========================================================================