எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

செவ்வாய், 1 ஜூலை, 2025

பாரு பாரு... நல்லாப் பாரு... பகவான் படைச்சிருக்கான் பாரு!!!


காணொலியில் காணப்படுபவை பிறந்து மிகக் குறைந்த நாட்களே ஆன பறவைக் குஞ்சுகள்.

போதிய மயிர் வளர்ச்சி இல்லை. திடமாக நிற்பதற்கான வலிமையைக்கூட உடம்பு பெற்றிடவில்லை.

அம்மாக்காரி கொண்டுவந்து கொடுக்கும் இரையைப் பெறுவதற்கான பார்வைத் திறனும் இல்லை.

இரை என்று நினைத்து ஒன்றையொன்று கொத்திக்கொள்வது காணச் சகிக்காத கொடூரம்.

கொடூரம் நிகழக் காரணம்?

பசி அய்யா பசி, வயிற்றுப் பசி!!

இவை போன்ற உயிரினங்கள் முழு வளர்ச்சி பெற்ற பிறகு அவற்றைப் படுத்துவது உடலுறவுப் பசி!

[காணொலி காண்போரைச் சங்கடப்படுத்தும் என்பதால் தவிர்க்கப்பட்டது]

மேற்கண்ட ‘பசி’கள் அனைத்து உயிரினங்களுக்கும் உண்டு மனித இனம் உட்பட.

‘பசி’களைத் தணிக்க அன்றாடம் போராடித் துன்புறும் வகையில் உயிரினங்களை ஏன் படைத்தான் எல்லாம் வல்ல அந்த ஆண்டவன்?

“இனவிருத்திக்காக” என்பார்கள் அவதாரங்களும் மகான்களும்.

உயிரினங்களைப் படைத்து அவற்றை விருத்தி செய்யும்படி  அந்த ஆண்டவனிடம் அவர்கள் கோரிக்கை வைத்திருப்பார்களோ?

“ஆம்” என்றால்.....

அவர்கள் மகா மகா மகா பாவிகள்!